Site icon Tamil News

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் இந்திய மாணவிக்கு நேர்ந்த கதி !

பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பூனம்தீப் கவுர் (21). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படிப்புக்கான விசாவில் கனடா நாட்டுக்கு சென்று, தங்கி தனது படிப்பை தொடர்ந்து வருகிறார்.

நிலையில், தனது நண்பர்களுடன் கனடாவில் உள்ள புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு பூனம்தீப் கவுர் சென்று உள்ளார்.

இதில், அவர் திடீரென ஆழமுள்ள குழியில் தவறி விழுந்து உள்ளார். இதனை கண்ட அவருடன் சென்றவர்கள் பதறி உள்ளனர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. பூனம்தீப் உயிரிழந்து விட்டார். இந்த தகவல் தூதரகம் வழியே பூனம்தீப்பின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டு விட்டதா? இல்லையா? என்ற விவரங்கள் வெளிவரவில்லை. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version