Site icon Tamil News

களுத்துறை கடற்கரையில் அநாகரீகமாக நடந்துகொண்ட காதல் ஜோடிகள் கைது

களுத்துறை கெலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட 35 தம்பதிகளை தெற்கு களுத்துறை பொலிஸார் இன்று (12) கைது செய்துள்ளனர்.

களுத்துறை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் சிறார்கள் உட்பட சுமார் எழுபத்தைந்து பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் மற்றும் பல சிறார்களும் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் என்ற போர்வையில் கடற்கரைக்கு வந்துள்ளனர்.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள் அனைவரும் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து விடுவிக்கப்பட்டனர்.

Exit mobile version