Site icon Tamil News

கொழும்பு – பதுளை பிரதான வீதி தடைப்பட்டுள்ளது

மண்சரிவு காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதி பத்கொட பகுதியில் தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இன்று (05) காலை முதல் அப்பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஹல்துமுல்ல மற்றும் பெரகலைக்கு இடைப்பட்ட பத்கொட பிரதேசத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version