Site icon Tamil News

இலங்கையில் பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (1011) பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்  அதிகபட்சமாக 75 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடமும் கோரிக்கை விடுக்கிறது.

Exit mobile version