ஐரோப்பா

இத்தாலியில் திடீரென பச்சை நிறமாக மாறிய கால்வாய் – குழப்பத்தில் பொலிஸார்

இத்தாலியில் புகழ்பெற்ற கிராண்ட் கால்வாயின் ஒரு பகுதி பச்சை நிறமாக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெனிஸ் நகரில் உள்ள கால்வாயிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களே அதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நீரின் நிறம் மாறியிருப்பதை முதலில் நகரவாசிகள் உணர்ந்ததாக அப்பகுதியின் தலைவர் லூகா சையா (Luca Zaia) தமது Twitter பக்கத்தில் தெரிவித்தார்.

சுற்றுப்பயணிகள் பச்சை நிற நீரைப் படம் எடுத்தனர். அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்வதற்காக அந்த நீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கிராண்ட் கால்வாய் பச்சை நிறத்திற்கு மாறியிருப்பது இது முதல்முறை அல்ல என கூறப்படுகின்றது.

1968இல் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பெருக்க அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஓவியர் நிக்கலஸ் கார்சியா உரிபுரு (Nicolas Garcia Uriburu) காய்வாயில் பச்சை சாயத்தைக் கலந்துவிட்டார்.

(Visited 13 times, 1 visits today)
See also  கம்பளிப்பூச்சியால் ஏற்படும் ஆபத்து : பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் பயணிகளுக்கு எச்சரிக்கை!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content