Site icon Tamil News

கெஹலியவிற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் வேலைதிட்டம் முன்னெடுப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பத்தாயிரம் கையெழுத்துக்களை சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.

நாவலப்பிட்டி மாவட்ட அடிப்படை வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பத்தாயிரம் கையொப்பங்களுடன் கூடிய மனு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version