Site icon Tamil News

ஸ்மார்ட் போனுக்காக அண்ணன் செய்த செயல்… உண்மையை கண்டுபிடித்த தம்பி!

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் ஸ்மார்ட் போன் வாங்க பணம் தரவில்லையென்று மகன், தாயை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலாபாய் குலாப்ராவ் பத்வைக் (47) என்பவருக்கு ராம்நாத் குலாப்ராவ் பத்வைக், தீபக் பத்வைக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆன நிலையில் மூத்த மகனின் வீட்டில் தாய் கமலாபாய் வசித்து வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் தாய் கமலாபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தீபக்கிற்கு தெரியவர, அவர் பார்ப்பதற்கு வந்துள்ளார். ஆனால், அவர் சென்று பார்ப்பதற்குள் தாயார் இறந்ததுவிட்டார்.இளைய மகன் தீபக் தனது தாயை பார்க்கும் போது கழுத்தில் காயமும், இடது கை கட்டைவிரலில் மையும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் இல்லை.

இதனால் சந்தேகமடைந்த தீபக், தாய் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அண்ணன்தான் அதற்குக் காரணம் எனவும் பொலிஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு, தீபக்கின் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்போது, மூத்த மகனை விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து மூத்த மகன் ராம்நாத் கூறுகையில், “ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக பணம் கேட்டு தாயிடம் சண்டை போட்டேன் என்றும், அதனால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொன்றேன்” எனவும் கூறியுள்ளார்.இதனயைடுத்து ராம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version