இந்தியா

இந்திய குடிமக்களுக்கான விசாக்களை நிறுத்திய பாகிஸ்தான்

  • April 25, 2025
  • 0 Comments

இந்திய குடிமக்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது. இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இது நடந்தது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா தள்ளுபடி திட்டத்தையும் இந்தியா ரத்து செய்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் வான்வெளி […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • April 25, 2025
  • 0 Comments

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கொலைகளின் பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் அருண விதானகமகே எனப்படும் கஜ்ஜா மற்றும் அவரது 2 பிள்ளைகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்தியாவிற்கு தப்பிச் செல்லும்போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். நாடுகடத்தப்பட்ட சந்தேக நபர் […]

இலங்கை

இலங்கை வந்த விமானத்தில் சுவீடன் நாட்டவரின் மோசமான செயல் – அபராதம் விதித்த நீதிமன்றம்

  • April 25, 2025
  • 0 Comments

விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் சுவீடன் நாட்டவருக்கு 26,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நவன, இந்த சம்பவம் தொடர்பாக தனது கட்சிக்காரர் தற்போது மன உளைச்சலில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். சம்பவம் நடந்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

புனித பாப்பரசர் போப்பின் இறுதி சடங்கு – புகைப்படம் எடுப்பதற்கு தடை!

  • April 25, 2025
  • 0 Comments

புனித பாப்பரசர் போப் பிரான்ஸிஸ் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதை புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் போப்பின் படங்களையும் வீடியோக்களையும் வெறுப்பூட்டும் வகையில் வெளியிட்டதை தொடர்ந்து மற்ற யாத்ரீகர்கள் கோபமடைந்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போப்பின் உடலுக்கு 30 அடிக்குள், காவலர்கள் தங்கள் தொலைபேசிகளை ஒதுக்கி வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.  இல்லையென்றால் அவற்றை பறிமுதல் செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது விசுவாசிகள் இப்போது வரிசையின் முன்பக்கத்தை அடையும்போது, ​​அவர்கள் பிரான்சிஸை அமைதியான கண்ணியத்துடன் பார்வையிட வேண்டும் […]

செய்தி

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இனி கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு

  • April 25, 2025
  • 0 Comments

நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு அதிரடி தடை நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே இருநாட்டு வணிகம், தூதரக உறவுகள், எல்லை பங்கீடுகளில் பல்வேறு தடை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாட்டு போட்டியிலும் இருநாட்டு பகை எதிரொலிக்கிறது. பஹல்காம் தாக்குதல் குறித்து பிசிசிஐ […]

வட அமெரிக்கா

வடகரோலினாவில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ChatGPT : குவியும் பாராட்டு!

  • April 25, 2025
  • 0 Comments

40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை ChatGPT துள்ளியமாக கண்டுப்பிடித்ததை தொடர்ந்து அவரது உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வட கரோலினாவிற்கும் அமெரிக்க விர்ஜின் தீவுகளுக்கும் இடையில் வசிக்கும் பெண் ஒருவர் தனது “மறைக்கப்பட்ட புற்றுநோயை” கண்டறிந்து தனது உயிரைக் காப்பாற்றியதற்காக ChatGPT-க்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மருத்துவர்கள் தனது அறிகுறிகளைப் புறக்கணித்து, அவற்றை முடக்கு வாதம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். நாளடைவில் எடை இழப்பை அவதானித்த பிறகு  ChatGPTயிடம் […]

ஐரோப்பா

துருக்கியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் – கட்டடங்களிலிருந்து கீழே குதித்த 150 பேர் காயம்

  • April 25, 2025
  • 0 Comments

துருக்கி – இஸ்தான்புல் நகரை நிலநடுக்கம் உலுக்கியபோது கட்டடங்களிலிருந்து கீழே குதித்த சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பதற்றத்தில் அவ்வாறு செய்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். எனினும் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்நகரில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான சேதங்கள் ஏற்பட்டதாக எந்த உடனடித் தகவலும் இல்லை. இஸ்தான்புல் பக்கத்தில் உள்ள சில மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

  • April 25, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (25)  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில்  75 மில்லிமீற்றர் அளவில்  மிதமானது முதல் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 28 வயதில் பணியிலிருந்து ஓய்வு – மகிழ்ச்சியாக வாழ இளைஞர் எடுத்த தீர்மானம்

  • April 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடாவில் 28 வயதில் பணியிலிருந்து அமெரிக்க இளைஞர் ஒருவர் ஓய்வு பெற்றுள்ளார். பென்சகோலாவில் வசிக்கும் பேரெல்லி என்ற இளைஞர், 30 வயதுக்குள் தனது நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். 2020ஆம் ஆண்டு, கொரொனா காலத்தில் வீட்டுக்கு செவிலியர்களை அனுப்பி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ரீவைடலைஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அவர், 2023ஆம் ஆண்டு தனது 28வது வயதில் 106 கோடி ரூபாய்க்கு அதனை விற்றுள்ளார். […]

வட அமெரிக்கா

அமெரிக்க விமானத்தில் மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் : பரிதாபமாக பறிபோன உயிர்!

  • April 25, 2025
  • 0 Comments

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவருக்கு மருத்துவ அவசர நிலை எழுந்த நிலையில், அவருக்கு உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் பறக்கத் தகுதியற்ற ஒரு பயணியை இணைப்பு விமானத்தில் தொடர்ந்து பயணிக்க அனுமதித்ததாக விமான நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கென்டக்கியைச் சேர்ந்த 62 வயதான ஜான் வில்லியம் கேனன், கொலராடோவிற்குச் செல்லும் பயணத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் […]

Skip to content