தெற்கு லண்டனில் சந்தேகத்திற்குரிய கத்திக்குத்து சம்பவம் ; ஐவர் காயமடைந்ததை அடுத்து ஒருவர் கைது
தெற்கு லண்டனில் நடந்த சந்தேகத்திற்குரிய கத்திக்குத்து சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்தில் ஐந்து பேருக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக சேவை தெரிவித்துள்ளது. ஒரு கிடங்கில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக லண்டனை தளமாகக் கொண்ட ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.