இலங்கை

இலங்கையில் சில இடங்களில் கனமழை!

  • January 29, 2025
  • 0 Comments

இலங்கையில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். அத்துடன், நாட்டின் தெற்குப் பகுதியில் மேக மூட்டமான வானம் […]

வட அமெரிக்கா

கொலம்பியா நாட்டவர்கள் 200 பேரை அதிரடியாக நாடு கடத்திய டிரம்ப் அரசு

  • January 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து கொலம்பியா நாட்டவர்கள் 200 பேர் நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துவந்த கொலம்பியா நாட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளது. கொலம்பிய ராணுவத்துக்கு சொந்தமான இரு விமானங்கள் மூலம் அவர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டனர். கடந்த வாரம், அமெரிக்க ராணுவ விமானங்களில் கொலம்பியா நாட்டவர் நாடு கடத்தப்பட்டபோது, விமானங்களை தரையிறங்க விடாமல் கொலம்பியா அரசாங்கம் திருப்பி அனுப்பியது. டிரம்ப் 50 சதவீதம்வரை வரி விதிக்கப்போவதாக மிரட்டியதும், தங்கள் நாட்டவரை சொந்த விமானங்களில் அழைத்து வர கொலம்பியா […]

உலகம்

வர்ண ஜாலம் காட்டும் அவ்ரோரா அதிசய ஒளியை ஆய்வு செய்ய ரொக்கெட் அனுப்பும் நாசா

  • January 29, 2025
  • 0 Comments

ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கின் பனி படர்ந்த பகுதிகளில் 2 ரொக்கெட்டுகளை அனுப்ப உள்ளதாக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. வர்ண ஜாலம் காட்டும் அவ்ரோரா அதிசய ஒளியை ஆய்வு செய்ய இந்த ரொக்கெட்கள் அனுப்பப்படவுள்ளது. பல வண்ண அவ்ரோவை ஆய்வு செய்ய ஒரு ராக்கெட்டும், கருப்பு நிற அவ்ரோராவை ஆய்வு செய்ய ஒரு ராக்கெட்டும் அனுப்பப்படும் என குறிப்பிடப்படுகின்றது. அவ்ரோராவின் அறிவியல் ரகசியங்களை இதன் மூலம் அறிய திட்டமிட்டுள்ளதாகவும், நாசா தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம் இன்றைய முக்கிய செய்திகள்

உலக ஜாம்பவான்களை ஆட்டம் காண வைத்த ‘DeepSeek’ நிறுவனர் குறித்து வெளியான தகவல்

  • January 29, 2025
  • 0 Comments

சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது டீப்சீக் (DeepSeek)உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆகின்றன. ஆனால் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், ஏஐ-க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் […]

செய்தி விளையாட்டு

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா காரணமா? முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு

  • January 29, 2025
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரை இந்திய மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று கைப்பற்றவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் […]

செய்தி

தேங்காய்களைக் கொள்வனவு செய்ய அவசரப்பட வேண்டாம் – இலங்கை மக்களிடம் கோரிக்கை

  • January 29, 2025
  • 0 Comments

இலங்கையர்கள் அவசரப்பட்டு தேங்காய் கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். தேங்காய்களின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என எவராலும் எதிர்வு கூற முடியாது. தேங்காய் தட்டுப்பாடு என்பதற்காக கலவரமடைய வேண்டாம் என அவர் அறிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேங்காயின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் என்று யாராலும் எதிர்வுகூற முடியாது. அரசாங்கம் என்ற ரீதியில் […]

ஆசியா செய்தி

கொரிய தீபகற்பத்திலும் சீனாவிலும் கடும் பனிப்பொழிவு – மில்லியன்கணக்கான மக்கள் பாதிப்பு

  • January 29, 2025
  • 0 Comments

கொரிய தீபகற்பத்திலும் சீனாவிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், மில்லியன்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் ஜேஜு தீவில் 120 சென்ட்டிமீட்டர் உயரத்துக்குப் பனி பொழிந்தது. தலைநகர் சோலும் சுங்ஜு நகரமும் கடும் அவதிக்கு உள்ளாயின. அதிகாரிகள் கடும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சாலைகளில் கவனமாகச் செல்லுமாறு வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நாடு முழுதும் 100க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமாயின. வட கொரியாவின் சில பகுதிகளிலும் பனி விடாது கொட்டுகிறது. தென் […]

செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்கு தடை: கையெழுத்திட்ட டிரம்ப்

  • January 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்கும் உத்தரவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். திருநங்கை, நம்பிகள், அமெரிக்கப் படைகளில் சேர்வது குறித்த பென்டகனின் கொள்கையை திருத்துமாறு, பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத்தை வலியுறுத்துவதற்கான உத்தரவாக அது அமைந்துள்ளது. இதன் மூலம், அமெரிக்க இராணுவ சேவையில், மாற்றுப் பாலினத்தவர் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்காலத்தில் தடை ஏற்படுத்த வழிவகை செய்யப்படும். அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் ஹெக்செத் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி

  • January 29, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தவர்கள் சிக்கியுள்ளனர். அவ்வாறு சிக்கிய 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த சில நாட்களிலும் இன்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி […]

செய்தி விளையாட்டு

ENGvsIND – மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி

  • January 28, 2025
  • 0 Comments

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷமி இடம்பிடித்துள்ளார். அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 […]