இலங்கை செய்தி

இலங்கை முழுவதும் நீர் தடை ஏற்படும் அபாயம் – விடுக்க்பபட்டுள்ள எச்சரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை பூராகவும் நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்போம்  என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தை பாரிய போராட்டமாக மாற்றி,  நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்துவோம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக அதன் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை 10 நாட்களுக்குள் வழங்குமாறு எமது தொழிற்சங்கம் கடந்த […]

இலங்கை செய்தி

இலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை பண்டிகை காலத்தில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பயன்படுத்தப்படும் ஒரு லட்சத்து 67 ஆயிரம் சோதனைக் குழாய்கள் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. அவற்றுள் சுமார் 70 ஆயிரம் சோதனைக் குழாய்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தின் போது மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக மற்றும் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான கண்காணிப்பு பணிகளை பொலிஸார் […]

இலங்கை செய்தி

கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே இதனை தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி  5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை –  காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது. எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை […]

இலங்கை செய்தி

பேருவளையில் அரசியல்வாதியின் மனைவி மீது சரமாரியாக கத்திக்குத்து

  • April 12, 2023
  • 0 Comments

பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை […]

இலங்கை செய்தி

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை

  • April 12, 2023
  • 0 Comments

இன்று (07) பிற்பகல் அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த  ரயிலில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ தல்பிட்டிய ரத்நாயக்க வீதியில் புகையிரத கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாதுவ நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்திர குமாரவின் பணிப்புரைக்கமைய பல்வேறு முறைப்பாடு திணைக்கள அதிகாரிகள் […]

இலங்கை செய்தி

கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியர்

  • April 12, 2023
  • 0 Comments

பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இன்று (07) காலை இருபத்தைந்து வயதுடைய முன்பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். முருதலாவ பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சாப்பா (25) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கினிஹேன மயானத்திற்கு அருகில் இன்று காலை முன்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது யாரோ அவரது கழுத்தை அறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்பள்ளி ஆசிரியை வீட்டில் இருந்து வரும்போது […]

இலங்கை செய்தி

பேராதனையில் உயிரிழ்ந்த கர்ப்பிணி தாய்

  • April 12, 2023
  • 0 Comments

அறுவைசிகிச்சைக்குப் பிறகு 26 வயது கர்ப்பிணி தாய் உயிரை இழந்துள்ளார். இந்த சம்பவம் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (06) இடம்பெற்றது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பெண் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். கண்டி கன்னோருவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பிரசவித்த குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன […]

இலங்கை செய்தி

அடுத்த ஆண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலட்சத்திற்கு நிலைப்படுத்த திட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்ட நடவடிக்கைகளை சர்வதேச நிதி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலத்திற்குள் பொருளாதார வளர்ச்சி முன்னெற்றமடையும். சகலருக்கும் நிவாரணம் வழங்கும் […]

இலங்கை செய்தி

திருகோணமலையின் முக்கிய பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையின் இன்னுமொரு பகுதியில் இன்று பௌத்த துறவிகள் விசேட பூஜைகளை செய்துள்ளதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா தெரிவித்துள்ளார். 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில்,  அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் இனங்காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த பகுதியை இந்துக்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பகுதியை சுத்தம் […]

செய்தி

தடம்புரண்ட உதயதேவி ;16 பேர் படுகாயம்

  • April 12, 2023
  • 0 Comments

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி ரயில், கந்தளாய் – அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Skip to content