இலங்கையில் கணவனை கொன்று புதைத்த மனைவி – 33 வருடங்களின் பின்னர் வெளிவந்த தகவல்
ஊருபொக்க பிரதேசத்தில் 33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்ததாக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கமைய, அவரது மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன், தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கழிவறை குழியையும் அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியுள்ளார். அதனையடுத்து, […]