இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்காவில் பரபரப்பு – இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்ய

  • May 22, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் பயங்கரவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறியுள்ளார். இந்த விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். துப்பாக்கி சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திய நபரை கைது செய்த […]

செய்தி

இலங்கையில் மின் கட்டண திருத்தம் – பொது மக்களிடம் கருத்து கோர நடவடிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படுமென, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ள போதிலும், குறித்த முன்மொழிவு ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டணத் திருத்தத்தைவிடக் குறைவானதாக இருக்குமென, இலங்கை மின்சார சபை அண்மையில் தெரிவித்திருந்தது. கடன் […]

வாழ்வியல்

நீரிழிவு நோயாளிகள் கிட்னியை பாதுகாக்க செய்ய வேண்டியவை

  • May 22, 2025
  • 0 Comments

உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அல்லது செயல் இழந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் உபாயம் அதிகரிக்கிறது. இரத்தத்தை வடிகட்டி, சிறுநீர் வழியாக உடலில் இருந்து அசுத்தங்களை வெளியேற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்படுவது அவசியம். இல்லை எனில் உடலில் நச்சுக்கள் அதிகரித்து, ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீரழிவு அல்லது இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் […]

விளையாட்டு

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள்

  • May 22, 2025
  • 0 Comments

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி 18.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே, மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லியை வீழ்த்தியதன் […]

உலகம்

22 நாடுகள் காசாவிற்காக விடுத்த கோரிக்கை

  • May 22, 2025
  • 0 Comments

காசாவிற்கு கூடுதல் உதவி கோரி 22 நாடுகள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கை நல்ல நோக்கத்துடன் வெளியிடப்பட்டள்ளது. 22 நாடுகள் கையெழுத்திட்ட அந்த அறிக்கையில், இஸ்ரேல் அறிமுகப்படுத்தும் காசாவிற்கு உதவி வழங்குவதற்கான புதிய மாதிரியை ஆதரிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு மாத முற்றுகைக்குப் பிறகு காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் அது போதாது என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்தது. காசாவிற்கு உதவி மீண்டும் தொடங்க உடனடியாக அனுமதிக்கவும், ஐக்கிய நாடுகள் சபை […]

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் ஒருவர் பலி – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

  • May 22, 2025
  • 0 Comments

கடுமையான வானிலைக்கு மத்தியில் நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மோட்டோவில் உள்ள வடக்கு மோட்டோ சாலையில் உள்ள ஒரு நிலத்தில் 63 வயதுடையவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் பெய்த கனமழையின் தாக்கத்தால் ஆறுகளும் நிரம்பி வழிகின்றன. அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் […]

ஆசியா

சிங்கப்பூரில் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிகரிக்கும் இதய நோயாளர்கள்

  • May 22, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் இளைஞர்களிடையே இதய நோய்ச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 120,000 நோயாளிகளைக் கவனிப்பதாக தேசிய இதய நிலையம் தெரிவித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் அது 50 சதவீதம் அதிகமாகும். சிங்கப்பூரில் மாரடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் மாரடைப்புப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மொத்தம் 8,000 சம்பவங்கள். பத்தாண்டுகளுக்குப் பின் அந்த எண்ணிக்கை 12,000ஆக இருந்தது. 2050ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் மாரடைப்புச் சம்பவங்கள் மும்மடங்கு […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

  • May 22, 2025
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு […]

உலகம் செய்தி

நன்கொடை வழங்குவதனை குறைத்துக்கொள்ள தயாராகும் எலான் மஸ்க்

  • May 22, 2025
  • 0 Comments

நன்கொடை மற்றும் அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் உள்ளார். இந்த நிலையில், அவரின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே நிறைய நன்கொடை அளித்துள்ளதாகத் அவர், தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் […]

இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – துருக்கி பொருட்களைப் புறக்கணிக்கும் இந்திய வர்த்தகர்கள்

  • May 22, 2025
  • 0 Comments

துருக்கியிலிருந்து வரும் பொருட்களை இந்தியாவில் உள்ள சிறிய மளிகைக் கடைகளும் பெரிய சில்லறை வர்த்தகர்களும் புறக்கணிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலில் துருக்கி, பாகிஸ்தான் பக்கம் நின்றது இந்தியர்களைக் கோபப்படுத்தியது. அதனால் இந்திய வர்த்தகர்கள் துருக்கியின் சாக்லெட், கோப்பி, துணி உள்ளிட்ட பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதியில் பயணிகள் மீது சென்ற மாதம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பதில் தாக்குதல்களை நடத்தியது. 4 நாட்களுக்கு இருநாடுகளும் […]

Skip to content