இலங்கை செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என அந்த சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். நேற்றைய தினம் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 145000 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட […]

இலங்கை செய்தி

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் அடக்குமுறை : ஐ.நாவிடம் வலியுறுத்தி போராட்டம்!

  • April 11, 2023
  • 0 Comments

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் மோசமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், வசந்த முதலிகே உள்ளிட்டவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் இருவர் உயிரிழந்தமைக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது. தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் உபயோகிக்கப்படும் கண்ணீர்புகைக்குண்டுகள் காலாவதியானவை என்றும், விஷத்தன்மையுடையவை […]

இலங்கை செய்தி

மருந்து தட்டுப்பாடு இம்மாதத்தில் முடிவுக்கு வரும் – கெஹெலிய!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பெரும்பாலும்  இம்மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும். அத்துடன் சத்திர சிகிச்சை உட்பட முன்னுரிமையளிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஷேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளின் போதும் வருடத்தின் முதல் காலாண்டுக்குள் […]

இலங்கை செய்தி

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அரச தொழில் கிடைக்காது : எச்சரிக்கும் அரசாங்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

அரச எதிர்ப்பு போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் அரச சேவைகளை சீர்குலைக்கும் அல்லது  அதற்கு சமமான எதிர்ப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் விபரங்களை ஒரு தொகுப்பாக சேகரித்து பராமரித்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது இந்த பதிவுகள் தரவு உள்ளீடு வடிவத்தில் பராமரிக்கப்படவுள்ளதுடன் அத்தகைய நபர்கள் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போதுஇ ​​அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் ஒன்றினையுமாறு சந்திரிக்கா அழைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் அனைவரையும் கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எனது ஆட்சி காலத்தில் ஆகக் கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாத்திரமே கடன் பெறப்பட்டது. ஆனால் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள மின்சார வாகனங்கள் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

  • April 11, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.இந்த வேலைத்திட்டம் நேற்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கையை சுங்கத்துறை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு இந்த வேலைத்திட்டம் உதவியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார். அதேவேளை இலங்கையிலிருந்து சட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் […]

இலங்கை செய்தி

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகம் : டிரானிற்கு அழை

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பு களனி பல்கலைகழகங்களிற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களி;ல் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காக  பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இந்த விசாரணைகளிற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெசினை 13 ம் திகதி விசாரணைகளிற்காக ஆஜராகுமாறு மனித உரிமை ஆணைக்குழு அழைத்துள்ளது. இதே வேளை குறித்த ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை அவர்களது பதவி நிலையுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா […]

இலங்கை செய்தி

நண்பன் வீட்டில் தங்க வளையலை திருடி செல்ல நாய்க்கு பிறந்தாள் கொண்டாடிய இளைஞன்

  • April 11, 2023
  • 0 Comments

நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க வளையலை திருடி, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்திய சம்பவம் ஒன்று மொரட்டுமுல்லவில் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய குறித்த சந்தேக நபர், தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர். இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் இருந்து தங்க நகை காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நபர் தனது […]

இலங்கை செய்தி

நாளைய தினம் முதல் விமான டிக்கட்டுகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 11, 2023
  • 0 Comments

நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என […]

இலங்கை செய்தி

ஒரேவாரத்தில் 39,000ரூபாவால் குறைந்த தங்கவிலை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார். உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை தங்கம் விலை குறைவால், நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை மத்திய வங்கி […]