இலங்கை செய்தி

தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட முஸ்தீபு : பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

  • April 11, 2023
  • 0 Comments

பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கிடையில் முதற்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த பேச்சுவார்த்தையின்போது கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான ஆரம்பப் […]

இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே விலை குறைய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்ற இராணுவத்தினர் இலங்கை திரும்பவில்லை என அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

பிரிகேடியர் உட்பட 13 இலங்கை இராணுவ அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களை அடுத்து, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு இலங்கை இராணுவ அதிகாரிகள், அவர்களின் படைப்பிரிவுத் தளபதிகளிடம் அனுமதி பெற வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும் விளக்கமளித்துள்ளது. இராணுவ சேவையை விட்டு வெளியேறி, […]

இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டம் தொடர்பில் விரைவில் வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பிலான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய சட்டம் பெரும் சர்ச்சைக்குரிய 1978ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தினை பதிலீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த உத்தேச புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரீ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை ரத்து செய்து விட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை அறிமுகம் செய்வதாக அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித […]

இலங்கை செய்தி

ராஜபக்சகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள்; நாமல் பதிவிட்டுள்ள ட்வீட்!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது நாடாளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை பெருமைக்குரியதாகும். இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் பொது நிர்வாகம், தணிக்கை நிறுவனங்கள் குறியீடு […]

இலங்கை செய்தி

ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

ஜெர்மனி மொழியை இலவசமாகக் இலங்கையர்களுக்கு கற்பதற்கான பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை பத்திரிகை சபையின் தலைவரராகவும் செயற்படுபவரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த பாடத்திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார், மேலும் பல இணையத்தள சேவைகள் ஊடாக இதனை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்மயமாக்கலில் உலகின் முன்னணி நாடான ஜெர்மனியில் அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையர்களும் ஜேர்மனியில் தொழில்களுக்குச் […]

இலங்கை செய்தி

யாழில் அச்சுறுத்தும் கொள்ளை கும்பல் – சிக்கிய மூவர்

  • April 11, 2023
  • 0 Comments

யாழில் வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ். சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் இணுவில் பகுதியில் வீடொன்றில் […]

இலங்கை செய்தி

இலங்கை பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளால் ஆபத்து

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, விதி மீறல்கள் இடம்பெறவுள்ளது. அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்காமை தெரியவந்துள்ளது. கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வௌியாகியுள்ளது. இந்த ஆய்விற்கமைய, 2022 ஆம் ஆண்டில் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2000 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2019 […]

இலங்கை செய்தி

வவுனியாவில் பிரபல வைத்தியரின் மகனின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • April 11, 2023
  • 0 Comments

வவுனியாவில் பிரபல வைத்தியர் ஒருவரின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 26 வயதான இளைஞர் என்றும் அவர் 2016ஆம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ எடுத்து, மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று, மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மைக்காலமாக வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றில் தூசு துகள்களின் செறிவு தரச்சுட்டியில் 124 அலகுகளாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சஞ்சய ரத்நாயக்க இதனை தெரிவித்தார். இந்தியாவில் இருந்து நாட்டை நோக்கி வீசும் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த நிலைமைக்கு காரணம் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகளுக்கமைய, தூசு துகள்களின் […]