இலங்கை

வவுனியா மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய்

  • April 10, 2023
  • 0 Comments

வவுனியாவில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார். இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த மரண செய்தியை இன்று அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் […]

இலங்கை

இலங்கையில் வீதியில் பயணித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 10, 2023
  • 0 Comments

வீதியில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை அபகரித்த நிலையில் தலத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி மற்றும் முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாம்களில் கடமையாற்றும் இராணுவத்தினர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று, இவ்வாறு அபகரித்து சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமிலும் மற்றையவர் கண்டி இராணுவ முகாமிலும் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலத்துஓயா  பகுதியைச் சேர்ந்த பெண் வீதியில் பயணித்துக் […]

இலங்கை

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 9ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது. அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர், திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறினார். உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 9 ஆம் திகதிக்கு முன்னர்  குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிக்கைமூலம் அறிவித்துள்ளது.

இலங்கை

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவன் – இலங்கையில் நடந்த கொடூ

  • April 10, 2023
  • 0 Comments

மனைவியை, நிர்வாணமாக்கி கை கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி, அந்தரங்கப் பகுதிக்குள் புகுத்திய கணவனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்க அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கணவர் தனது கை, கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி அந்தரங்கப் பகுதியில்  செலுத்தியதாகவும், புழுக்களை எடுத்து உடலில் செருகுவார் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில், தனது […]

இலங்கை

கண்டி-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் விபத்து – சாலையோரம் இருந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

  • April 10, 2023
  • 0 Comments

இன்று (03) மாலை, ஏ-09 கண்டி-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் திரப்பனய அலிஸ்தான் பகுதியில் வீதியில் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார், சிலாவத்துறை, பண்டாரவெளி பகுதியைச் சேர்ந்த நபர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வளைவில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தின் போது, ​​அப்போது சாலையோரம் இருந்த பெண் மீது வேன் மோதியது. ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை உடனடியாக அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு […]

இலங்கை

கொழும்பில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் இருந்து குழந்தை கடத்தல்

  • April 10, 2023
  • 0 Comments

கொழும்பில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் இருந்து  ஒன்றரை மாத குழந்தை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் வைத்து கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிசுவின் தாயும் தந்தையும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பிச்சைக்கார பெண் பம்பலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ரூபாவிற்கு குழந்தையை விற்க சிசுவின் தாய் சம்மதித்துள்ளார். […]

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிரிஸ்டலினா ஜோஜிவாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்

  • April 10, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு  விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில்,  அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் சீனப் பிரதமருடன் […]

இலங்கை

புலனாய்வு தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு இலங்கைக்கு அழுத்தம்!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், அமெரிக்காவின் சி.ஐ.ஏ பிரிவின் பிரதான […]

இலங்கை

ஆபிரிக்க நாடுகளுடனான இலங்கையின் வணிக நடக்கடிகைகளை விரிவுபடுத்த தீர்மானம்.

  • April 10, 2023
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சின் பொருளாதார இராஜதந்திர செயற்திட்டத்தின் ஓரங்கமாக ஆபிரிக்க கண்டத்தில் இலங்கையின் நிலவுகையை விரிவுபடுத்துவதை முன்னிறுத்திய வணிகப்பேரவையின் கூட்டம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆடையுற்பத்தி, மருந்துப்பொருள் உற்பத்தி, கட்டுமானம், நிதி, புதுப்பிக்கத்தக்க சக்திவலு, மட்பாண்ட உற்பத்தி என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு துறைசார்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட வணிகங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். ஆபிரிக்காவை பாருங்கள் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்தக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் நேற்றைய […]

இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு.

  • April 10, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பின் மூலம் எவ்வாறு அரசியலை நகர்த்தலாம் என்ற விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்தும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விரிவாக […]

You cannot copy content of this page

Skip to content