இலங்கை வந்த சுவீடன் பிரஜைக்கு நேர்ந்த கதி!
பொத்துவில் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுவீடன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தனது உணவு மற்றும் பானங்களுக்கு பணம் கொடுக்கவில்லை எனக் கூறி உதைத்து அவர் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஹோட்டலில் பணியாற்றும் இருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான குறித்த சுற்றுலாப் பயணி, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொத்துவில் நெடுஞ்சாலையின் குறுக்கே இரவு வேளையில் ஓடியபோது, காரில் மோதி படுகாயமடைந்து பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]