இலங்கை செய்தி

யாழில் சுற்றிவளைக்கப்பட்ட சொகுசு கார் – பொலிஸார் அதிர்ச்சி

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு கார் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோ கிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி – சிக்கிய பெண்கள்

  • April 12, 2023
  • 0 Comments

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று முன்தின் மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸை, கடுகுருதுவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது விடுதியின் முகாமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் விதாரன்தெனியே பிரதேசங்களைச் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – 12 வயது மாணவிக்கு ஆசிரியர் செய்த செயல்

  • April 12, 2023
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை – மயூரபுர பிரதேசத்தில் 12 வயது மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 28ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது தந்தை இது குறித்து விசாரித்துள்ளார். அதன்போது, ​​குறித்த மாணவி பல்லகஸ்வெவ சந்தியில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படும் சட்டமூலம் 10 மடங்கு பயங்கரமானது

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது, இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது என தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார். “புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. இது பயங்கரமானது. இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது. பேரணி சென்றால் அதனை பயங்கரவாத செயல் ஆக்கலாம். நபர்கள் கைது செய்யப்படலாம். அது தொடர்பான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தடுப்பு உத்தரவை […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் – ஜனாதிபதி ரணில்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையை முன்னோக்கி  கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் முற்பகல் நடைபெற்ற IMF மற்றும் அதற்கு அப்பால் கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு […]

இலங்கை செய்தி

யால பூங்காவில் இருக்கும் கரும்புலியின் உயிருக்கு ஆபத்து

  • April 12, 2023
  • 0 Comments

யால பூங்காவில் கரும்புலி நடமாடும் ஜபுரகல பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்ததையடுத்து, அந்த மிருகத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விலங்கின் பாதுகாப்பு கருதி நேற்று (29) முதல் குறித்த பகுதியை மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. யால பூங்காவில் 7 மாத கரும்புலி சுற்றித் திரிவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், நேற்று (28) புகைப்படக் கலைஞர் ஒருவர் அந்த விலங்கைப் படம் பிடித்து சமூக […]

இலங்கை செய்தி

வெடுக்குநாறி சம்பவம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு

  • April 12, 2023
  • 0 Comments

வுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும்இ இன்னும் அந்த பிரச்சினை தொடர்கிறது. வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

  • April 12, 2023
  • 0 Comments

பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட  விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1846 ஆம் ஆண்டு  அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கரிசனை!

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகப் பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டது. இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் குறித்த சட்டத்தின் உள்ளடக்கங்கள்,  பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானதாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலை […]

இலங்கை செய்தி

யாழில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராய விசேட கூட்டம்!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ். வடமராட்சியில் இருந்து  தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது செய்யக்கூடியதான சாத்தியக்கூறு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நேற்று மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் […]

You cannot copy content of this page

Skip to content