இலங்கை செய்தி

850,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்க தீர்மானம்

  • April 12, 2023
  • 0 Comments

நாட்டில் உள்ள மேலும் 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 16 ஜனவரி 2023 அன்று, 2 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாத காலத்திற்கு 10 கிலோ அரிசி ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், மேலும் 850,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் அவர்களையும் உத்தேச வேலைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கம் அடையாளம் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு சரியான நேரத்தில் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முக்கியம் – உலக வங்கி

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின் உயர்ந்த நிதி, வெளி மற்றும் நிதித் துறை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதன் திரவ அரசியல் நிலைமை ஆகியவை நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன என்று உலக வங்கி தனது இரு வருட புதுப்பிப்பில், நாட்டின் பொருளாதாரத்தின் மூல காரணங்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஸ்ரீலங்கா டெவலப்மென்ட் அப்டேட் (SLDU), ரீசெட் செய்ய நேரம், 2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.3 சதவீதத்தால் சுருங்கும் என்று கணித்துள்ளது, தேவை […]

இலங்கைக்கு வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்

  • April 12, 2023
  • 0 Comments

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியன் பேல் இலங்கைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவுக்கு விஜயம் செய்தார். தனது பயணத்திற்கு அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தேர்வு செய்துள்ளார். அவர் ஸ்ரீலங்கன் விமானத்தை வந்தடைந்த போது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளது. பேட்மேன் திரைப்படத்தில் பேட்மேனாக நடித்த பிறகு கிறிஸ்டியன் பேல் உலகளவில் மிகவும் பிரபலமானார். இலங்கை சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான […]

இலங்கை செய்தி

பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும் – சரத் வீரசேகர!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை தேரவாத சிங்கள பௌத்த நாடு ஆகவே பௌத்த மரபுரிமைகளை நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார் ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள். பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது […]

இலங்கை செய்தி

புதிய ஒம்புட்ஸ்மனாக கே.பி.கே.ஹிரிம்புரேகம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

  • April 12, 2023
  • 0 Comments

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது

  • April 12, 2023
  • 0 Comments

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு  பரிந்துரைக்கப்பட்ட  கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் வகை தற்போதைய கோட்டா பரிந்துரைக்கப்பட்ட புதிய கோட்டா THREE WHEEL (Special)  10 […]

இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக அறிவிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான பேராசிரியர் Steve H. Hanke  தெரிவித்துள்ளார். கடந்த  2022 ஆம் ஆண்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக கூறிய அவர், இவர்களில் அதிகமானவர்கள் மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள்  எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு 1884 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்தது போல் அந்நிய செலாவணி சபை நாட்டில் ஸ்தாபிக்கப்பட […]

இலங்கை செய்தி

தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்துவதாக சாணக்கியன் தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை  ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்பிற்கு வந்தபோதும் குசலான மலையில் வைத்து உங்களை தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளை செய்ய முடிகின்றது. இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்வுக்கு பயன்படுத்திய வாக்குச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதிப் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்துகொள்வதற்காக 2022.07.20 ஆம் திகதி நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின்போது உபயோகிக்கப்பட்ட வாக்களிப்புச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் இன்று (04) அறிவித்தார். 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 18 ஆம் வாசகத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2023.03.24ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவர்களால் […]

இலங்கை செய்தி

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் : புத்தாண்டிற்கு பிறகு தீர்வு?

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெறியாத நபர்களால் கடந்த மாதம் தகர்தெறியப்பட்டது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதிஇ பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் […]

You cannot copy content of this page

Skip to content