கனடாவில் 2010 இல் கொல்லப்பட்ட பெண் – 50 ஆயிரம் டொலர் வெகுமதி அறிவிப்பு
கனடாவில் 42 வயதான சோனியா வராச்சினின் தீர்க்கப்படாத கொலை வழக்கு விசாரணை தொடர்பில் பொது மக்களின் உதவி பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சோனியா வரச்சின், ஒன்ட்டின் ஆரஞ்ச்வில்லில் ஒரு குழந்தை மருத்துவ செவிலியராக இருந்தார். ஆகஸ்ட் 30, 2010 அன்று பணிக்கு வராம்ல் காணாமல் போனார். அவரது இரத்தக்கறை படிந்த கார் ஆரஞ்ச்வில்லி டவுன் ஹாலுக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் அருகிலுள்ள கலிடனில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. […]