ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அறுவர் பலி!
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்ட்யாண்டினிவ்கா நகரின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் வெளியிட்ட செய்தியில். ரஷ்யப் படைகள் எஸ் -300 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாவ்லோ கைரிலென்கோ கூறினார். இத்தாக்குதலில் 17 உயரமான கட்டிடங்கள் 18 வீடுகள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை அழிக்கப்பட்டன. மூன்று ராக்கெட்டுகளால் தாக்கப்பட்ட அவ்திவ்கா உட்பட கடந்த 24 மணி […]