செய்தி தமிழ்நாடு

கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

  • April 28, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட கோவளம் ஊராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது, அதனைப் போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் உள்ள ஏரியிலிருந்து மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கோவளம் ஊராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது அதனைத் தொடர்ந்து தையூர் ஏரியில் கிணறு தோண்டும் பணி சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது […]

இலங்கை

நுவரெலியாவில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 மாணவர்கள் !

  • April 28, 2023
  • 0 Comments

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. மேலும் உணவருந்தியவர்களில் சுமார் 26 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக […]

செய்தி தமிழ்நாடு

விவசாயத்தில் அசத்தும் பொறியியல் மாணவிகள்

  • April 28, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காயிரம் மாணவ மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாபெரும் கண்காட்சி விழா சவிதா பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு முன்னணி தொழில் நிறுவனர்கள் , உற்பத்தியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படைப்புகளை விளக்கினர். குறிப்பாக பொறியியல் படிக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் வெண்டைக்காய் […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

  • April 28, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. இக்கூட்டத்தில் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் படிவம் ஊராட்சி பகுதிகளிலும், மாநகர, பேரூராட்சி பகுதிகளிலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பொதுமக்களின் வீட்டுக்கே சென்று பொதுமக்களின் விருப்பத்தோடு அதிமுக […]

செய்தி தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ரூ.4,12,481 மதிப்பிலான வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது

  • April 28, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் விவசாயிகளிடம் […]

வட அமெரிக்கா

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல அமெரிக்க மாடல் அழகி மரணம் !

  • April 28, 2023
  • 0 Comments

பிரபல மாடல் அழகி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தார். 34 வயதாகும் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் 618Kக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கலிபோர்னியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், […]

செய்தி தமிழ்நாடு

உருவமில்லாமல் அழிச்சுடுவேன் திமுக பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

  • April 28, 2023
  • 0 Comments

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டல தொகுதியில் 7வது மண்டல கூட்டம் கடந்த ஏப்.26ல் நடைபெற்றது. இதில் 54வது வார்டு உறுப்பினர் நூர்ஜகான் தனது வார்டு பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்பினார் பின் கூட்டம் முடிந்து வெளியில் வந்த அவரை மண்டல தலைவர் பாண்டியன் செல்வியுன் கணவர் மிஷா பாண்டியன் என்பவர் அழைப்பு தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற உறுப்பினர் நூர்ஜஹான் […]

வட அமெரிக்கா

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்…

  • April 28, 2023
  • 0 Comments

கனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இணைய வழியிலான சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து கட்டணம் அளவிடும் ஓர் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் மரபு ரீதியான ஒலி ஒளிபரப்பு சேவைகளிடமிருந்து இந்தக் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது.இந்தக் கட்டணங்கள் இணைய வழி ஊடகங்களுக்கு பொருத்தப்பாடு உடையதாக இருக்கவில்லை.எனினும் தற்பொழுது லிபரல் அரசாங்கம் இணைய வழியிலான ஊடகங்களிடமிருந்தும் பணம் அளவீடு செய்யும் ஓர் புதிய சட்டத்தை […]

செய்தி தமிழ்நாடு

அரசின் பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்

  • April 28, 2023
  • 0 Comments

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை அரசு கருணாநிதி காலைக்கல்லூரியில் நடைபெறும் அனைத்து கல்லூரி மாணக்கர்களுக்கான பேச்சு போட்டியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்:அரசு பாதுகாப்பு இல்லங்களில் சரியான பாதுகாப்பு வசதிகளோடு தான் சிறுவர்கள் வைக்கப்படுகின்றனர்,சில நேரங்களில் அவர்கள் […]

செய்தி தமிழ்நாடு

குற்றவாளிகளின் தரவுகளை பதிவு செய்ய மென்பொருள்

  • April 28, 2023
  • 0 Comments

கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 35 லட்சம் மதிப்பிலான 170 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக ரவிச்சந்திரன் என்ற முக்கிய குற்றாவளி […]

You cannot copy content of this page

Skip to content