உலகம் செய்தி முக்கிய செய்திகள்

குழந்தை பிறந்த பின் வழங்கப்படும் விடுப்பு காலத்தை குறைத்த மஸ்க்!

  • April 30, 2023
  • 0 Comments

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு மாற்றத்தை எலான் மஸ்க் செய்துள்ளார். இந்நிலையில், இதற்கு முன்பு குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு 20 வாரங்களாக இருந்தது. அதை 2 வாரங்களாக எலான் மஸ்க் குறைத்து உத்தரவிட்டுள்ளார். அதாவது 140 நாட்களில் இருந்து […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முக்கிய அரசியல்வாதிகள் அகப்படுவார்கள் என எச்சரிக்கை!

  • April 30, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக  இதுவரை வெளிவராத உண்மைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேரா தெரிவித்துள்ளார். அதில் உள்ள தகவல்களை அவதானிப்பது மிகவும் தீவிரமானது என்றும் எனவே இதற்காக சட்டத்தரணியின் உதவியையும் நாடவுள்ளதாக ஹரோல்ட் அந்தோனி பெரேரா குறிப்பிட்டுள்ளார். தற்கொலை தாக்குதல்களின் அறிக்கைகள் அடங்கிய ஆறு குறுந்தகடுகளை (சிப்) கடந்த வார இறுதியில் மறைமாவட்டத் தலைவரிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் கையளித்திருந்தார். இந்த விசாரணை […]

இலங்கை

வாக்குவாதம் முற்றி மாணவனின் கழுத்தில் ஆழமாக குத்தப்பட்ட ஊசி!

  • April 30, 2023
  • 0 Comments

பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் தரத்தில் கல்விகற்க்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. பாடசாலை தொடங்கியதும் காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ​​புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர் மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக குத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவன் வலியால் அலறி துடித்த நிலையில், பாடசாலை அதிபர் மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பொல்பெத்திகம […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

8 இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இலங்கை மருத்துவர்!

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர் சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840000 அமெரிக்க டொலர்களை மோசடியாக பெற்றுள்ளார். இதனால் அவருக்கு  பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு […]

பொழுதுபோக்கு

லியோவில் இணையும் விக்ரம் பட வில்லன்… லோகேஷின் யுனிவர்ஸில் ட்விஸ்ட்

  • April 30, 2023
  • 0 Comments

விஜய்யின் லியோ ஷூட்டிங் கடந்த 60 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே முதல் வாரத்தில் லியோ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த ஷெட்யூலில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மூவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இந்நிலையில், விக்ரம் பட வில்லனும் லியோவில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ மிகப் பெரிய […]

இலங்கை செய்தி

சூடானில் சிக்கிய இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்!

  • April 30, 2023
  • 0 Comments

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளைஇ 6 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சவுதி அரேபியாவை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய சூடானில் இருந்து இதுவரையில் 19 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா

தொடர் கருச்சிதைவால் வருத்தத்தில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

  • April 30, 2023
  • 0 Comments

நர்சரி ஊழியரான பெண் ஒருவர் குழந்தைகள் மீதான பற்றால் தாயாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர், தொடர் கருச்சிதைவு காரணமாக மனமுடைந்து இறுதியில் அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு வேல்ஸ் பகுதியில் குடியிருந்து வந்த 26 வயது Jemma Zoezee என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் எலிகாய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி காலி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வருடத்தில் மாத்திரம் 229 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவது நெற்பயிர்களில் வேலை செய்பவர்கள் மாத்திரமல்ல என காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பஞ்சாப்பில் வாயு கசிவால் 11 பேர் உயிரிழப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு  ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளதுடன், 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நபர்களின் குடும்பத்தினர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில் என் குடும்பத்தில் மட்டும் 5 பேருக்கு சுயநினைவு இல்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினோம். எங்கள் ஊர் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். […]

ஐரோப்பா

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிக்கு எதிராக 17வது வாரமாக தொடரும் போராட்டம்

  • April 30, 2023
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைகும் வகையில் அரசு கொண்டு வரும் சட்டம் […]

You cannot copy content of this page

Skip to content