செய்தி தமிழ்நாடு

வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக தொட்டியில் நீர் நிரப்பப்படுகிறது

  • May 4, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடை வெப்பத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளது. வன விலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. திருப்போரூரில் 5,350 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன. மலைகளின் இடையே உள்ள வனப்பகுதிகளில் மான்இனங்கள், கழுதைப் புலி,நரி,மயில்,முயல் உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில்,கோடைக்காலம் துவங்கியுள்ளதால் கிராமப்புற பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு […]

வட அமெரிக்கா

சீனாவிலிருந்து கனடாவிற்கு வந்த பெட்டிக்குள் தெரிந்த கண்கள்; அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

  • May 4, 2023
  • 0 Comments

சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பெட்டியொன்றில் பூனையொன்றை கனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். வான்கூவார் ரிச்மன்ட்டின் பிரதான தபால் நிலைய பொதியிடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பெட்டியில் இந்த பூனை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெட்டியிலிருந்து துளையின் ஊடாக கண்களை மட்டும் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதன் பின்னர் பெட்டியை திறந்த போது அதில் பூனையொன்று உயிருடன் இருப்பதனை அவதானித்துள்ளனர். இந்தப் பூனை ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மிருக நலன் காக்கும் அமைப்பிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். […]

செய்தி தமிழ்நாடு

பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் பலி

  • May 4, 2023
  • 0 Comments

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ,பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அறிந்த […]

இலங்கை

இலங்கை பணிப்பெண்ணின் மரணத்தில் மர்மம் – கீதாகுமாரசிங்க

  • May 4, 2023
  • 0 Comments

குவைத்தில் பணி புரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தொடர்பில் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் விசாரணை நடாத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான கீதாகுமாரசிங்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தூதுவருடன் அலைபேசியில் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிரிழந்த குறித்த பெண் 7 வருடங்களாக குவைத்தில் பணி புரிந்து வந்ததாகவும் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கேள்வியெழுப்பியுள்ளதாக அமைச்சர் […]

செய்தி தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது

  • May 4, 2023
  • 0 Comments

கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்கு உள்ளும் வெளியிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த டீக்கடைகள், செல்போன் கடைகள், செருப்புக்கடைகள்,குளிர்பானக்கடைகள் என சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார நியமனம்!

  • May 4, 2023
  • 0 Comments

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) காலை ஐக்கிய இராச்சியத்தை நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையிலேயே  அவருக்கு இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஒடும் ரயிலில் கழுத்தை நெரித்து கொலை !

  • May 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள சுரங்கப் பாதை ரயிலில் மைக்கேல் ஜாக்சன் போன்ற தோற்றம் கொண்ட நபர், கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ஜோர்டன் நேலி(30) என்பவர், மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடுவதோடு அவர் போலவே தோற்றம் கொண்டவர் ஆவார். வறுமையில் வாடிய அவர் தங்குவதற்கு வீடில்லாமல் சாலையோரங்களில் தங்கி வாழ்ந்துள்ளார். கடந்த மே 1ஆம் திகதி மன்ஹாட்டன் அருகே சுரங்கப் பாதை ரயிலில் பயணம் செய்த அவர் தனது […]

செய்தி தமிழ்நாடு

பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

  • May 4, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் த்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கோவில் விழாக்களில் முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. சுந்தர வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்தியாக திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து பெண்கள் வடம் பிடித்து தேர் இழுக்க ஆனந்த ஐயங்கார் தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர் மாட வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்!

  • May 4, 2023
  • 0 Comments

பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை நிறைவேற்றும் வகையிலேயே பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பான நற்சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 50வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதியின் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

 சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்த ஜெலென்ஸ்கி!

  • May 4, 2023
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணியளவில் டச்சு செனட் கட்டிடத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகவும், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “உக்ரைனுக்கு நீதி இல்லாமல் அமைதி இல்லை” என்ற தலைப்பில் இதன்போது ஜெலென்ஸ்கி உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, அவரது வருகை பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அரசாங்க செய்தித் […]

You cannot copy content of this page

Skip to content