காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு
காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த திடீர் மழையால்இ ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. புஷுஷு மற்றும் நியாமுகுமி ஆகிய இரு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமான நிலையில்இ இதுவரை 401 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அம்மாகாண ஆளுநர் தியோ நக்வாபிட்ஜே காசி தெரிவித்துள்ளார். இந்நாளை தேசிய துக்க நாளாக காங்கோ அரசு […]