மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர்!
பிரான்சில் மாணவர்களுடைய பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் விக்டர் (29). அவர், தன் வகுப்பில் பயிலும் 63 மாணவர்களுடைய ஆங்கில விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.பிரான்சின் கல்வி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விக்டர் இவ்வாறு செய்துள்ளார். விக்டர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட உள்ள நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 160,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் அரசு சட்டத்தரணி அலுவலகமும், பள்ளிக்கல்வித்துறையும் […]