ஐரோப்பா

உக்ரைனுக்கு 3 பில்லின் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கும் ஜெர்மனி!

  • May 13, 2023
  • 0 Comments

ஜெர்மனி, உக்ரைனுக்கு ஏறக்குறைய 3 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாங்கிகள், விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட 2.7 பில்லியன் யூரோக்கள் ($3 பில்லியன்) மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை ஜெர்மனி உக்ரைனுக்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, ஜெர்மனிக்கு பயணிக்கவுள்ளார். இந்த நிலையில், மேற்படி அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைனுக்கு […]

இலங்கை

பால்மா இறக்குமதி தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை!

  • May 13, 2023
  • 0 Comments

பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும்  குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (15) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும்இ ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நேற்று (12) […]

பொழுதுபோக்கு

பல வருடங்களாக திரிஷா வாழ்ந்த இரகசிய வாழ்க்கை அம்பலம்!! திகைத்துப் போன ரசிகர்கள்

  • May 13, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா பல வருடங்கள் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. த்ரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னதாக வருண் என்பவரை திருமணம் செய்வதாக இருந்தார். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம் நோக்கி நகராமல் அப்படியே நின்றுவிட்டது. அதேசமயம் த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது தாய் உமா கிருஷ்ணன் தான் காரணம் […]

இலங்கை

புலம் பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் குறித்த தகவல்!

  • May 13, 2023
  • 0 Comments

இலங்கை புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டு பணம் 2022 ஏப்ரல் மாதத்தை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த ஏப்ரல் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  இது 205.1 மில்லியன் அமெரிக்க டாலர் (82.4%) அதிகரிப்பாகும் என்று அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மார்ச் 2023 இல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய 568 மில்லியன் டொலர்களைக் காட்டிலும், தற்போது […]

செய்தி தமிழ்நாடு

தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது

  • May 13, 2023
  • 0 Comments

துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வரும் ஸ்ரீலங்கன் விமானத்தில் பெரிய அளவிலான தங்கம் கடத்தப்படுவதாகவும், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் இந்த கடத்தலில் ஈடுபடுவதாகவும், சென்னை டிநகர் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இலங்கை மற்றும் துபாய் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னை சர்வதேச […]

ஆசியா

22 வயது மாணவனை திருமணம் செய்து கொண்ட 48 வயது ஆசிரியை!

  • May 13, 2023
  • 0 Comments

மலேசியாவில் 48 வயது ஆசிரியை ஒருவரை 22 வயதான மாணவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மலேசியாவின் பெல்டா ஏர் டவார் பகுதியை சேர்ந்தவர் முகமது டேனியல் அகமது அலி(22).2016ம் ஆண்டு உயர்கல்வி பயின்ற போது மலாய் பாடம் நடத்திய ஆசிரியர் ஜமிலா. ஜமிலாவின் குணமும், மாணவர்களுக்கு கனிவுடன் சொல்லிக்கொடுக்கும் விதமும் முகமது டேனியலை கவர்ந்துள்ளது.எனினும் ஜமிலா மீது மரியாதை கலந்த அன்பு மட்டுமே இருந்தது, பல ஆண்டுகளுக்கு தொடர்பு இல்லாமல் போகவே ஒருநாள் ஏதேச்சையாக […]

இலங்கை

ஒரு தலை காதலால் வந்த வினை : ஒரு பிள்ளையின் தாயிற்கு நேர்ந்தக் கதி!

  • May 13, 2023
  • 0 Comments

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 26 வயதுடைய நியூட்டன் தர்சினி  பிள்ளையின் தாயும், 24 வயதுடைய சிவபாலன் சுஜாந்தன் என்ற இளைஞரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில்,  விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,  குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளில், குறித்த 24 வயதுடைய இளைஞர் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், குறித்த பெண் திருமணம் முடித்தும், அவர் தொடர்ச்சியாக […]

வட அமெரிக்கா

வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய அமெரிக்கா

  • May 13, 2023
  • 0 Comments

உலகை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பல்வேறு நாடுகள், வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து இருந்தன. மேலும், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும், உலக நாடுகள் விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை […]

ஐரோப்பா

தேம்ஸ் நதியில் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட லண்டன் பெண்

  • May 13, 2023
  • 0 Comments

கிழக்கு லண்டனில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம் என்ற 24 வயது பெண் மாயமானதாக கூறி பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதற்கட்ட விசாரணையில் அவரது கணவரே கொலை செய்து சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து லியா ஆற்றில் வீசியதாக தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் நிபுணர்கள் குழு, ஆற்றில் சடலத்தை தேடும் பணிகளை துவங்கினர். இந்த நிலையில், […]

இந்தியா

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் : முன்னிலையில் காங்கிரஸ் கட்சி!

  • May 13, 2023
  • 0 Comments

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி – 120, பாஜக – 73,  மஜத – 25,  மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஷிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார். வருணா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன்னிலையில் இருக்கிறார். கனகபுரா […]

You cannot copy content of this page

Skip to content