ஐரோப்பா

ககோவ்கா அணை பகுதியில் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – செலன்ஸ்கி குற்றச்சாட்டு!

  • June 7, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைப்பால் சுமார் இலட்சக் கணக்கான மக்கள் சாதாரண குடிநீர் இன்று தவித்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றின் அழிவை  முற்றிலும் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அவர் விமர்சித்துள்ளார். குறித்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்ற நிலையில் அவர்களுக்கு அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யர்கள் உதவவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். உக்ரைன் துருப்புகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த செலன்ஸ்கி உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள […]

பொழுதுபோக்கு

“வந்து கொண்டிருக்கிறேன் ராவணா” வெளியானது ‘ஆதிபுருஷ்’ ட்ரைலர்…. அட்டகாசம்!!

  • June 7, 2023
  • 0 Comments

ஓம் ராவத் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில், பிரபாஸ், ராகவனான (ராமர்) நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மிக பிரமாண்ட பட்ஜட்டில், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக… இப்படத்தின் ப்ரீ -ரிலீஸ் ஈவென்ட் இன்று திருப்பத்தில் நடந்தது. திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மிக […]

இலங்கை

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம்!

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க முன்னெடுத்த தீர்மானங்களால், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளை, அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் குறித்து விசாரணை : மருதங்கேணி பொலிஸாருக்கு அழைப்பு!

  • June 7, 2023
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பகுதியில் கடந்த 3 ஆம் திகதியன்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் காண்பிக்காத ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். […]

ஐரோப்பா

ஜெனீவாவில் பழிக்கு பழிவாங்க காத்திருக்கும் பெற்றோர் – வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்

  • June 7, 2023
  • 0 Comments

ஜெனீவாவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்க, அவரது குடும்பத்தினர் காத்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அச்சம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள Thônex என்னுமிடத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, அந்தப் பகுதி இளைஞர்கள் வீடுகளுக்குள் அடைந்துகிடக்கிறார்களாம்.இதற்கிடையில், கடந்த சில நாட்களில் அந்த பகுதிக்கு பல முறை பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளது அந்த […]

இந்தியா

600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னையில் போராட்டம்!

தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்/ அத்துடன் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஏதிலி அந்தஸ்து தமது சுதந்திரத்தையும் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், தனியார் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை, அரச வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே அவர்களில் பலர் அன்றாடக் […]

இந்தியா

கிளர்ச்சியாளர்களால் ஆம்புலன்சில் வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட தாய் மற்றும் மகன்!

  • June 7, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் மணிப்பூர் நடக்கும் வன்முறையில் தாய், மகன் உட்பட மூவர் ஆம்புலன்சில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி எனும் சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரியபோது, சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் எதிரொலியாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாகவும், 310 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் இம்பாலில் உள்ள […]

ஐரோப்பா

ககோவ்கா அணை உடைப்பால் ஆபத்தில் உள்ள 42 ஆயிரம் பேர் : இரவுக்குள் உச்சத்தை எட்டும் வெள்ளம்!

  • June 7, 2023
  • 0 Comments

டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த ககோவ்கா அணை இடிந்து விழுந்ததில் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் இருப்பதாகவும், இன்று இரவுக்குள் வெள்ளம் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அத்துமீறலின் விளைவாக தெற்கு உக்ரைனில் உள்ள மக்களுக்கு “கடுமையான மற்றும் தொலைநோக்கு விளைவுகள்” ஏற்படும் என்று ஐ.நா உதவித் தலைவர் எச்சரித்துள்ள நிலையில், இந்த மதிப்பீடு வந்துள்ளது. அதேநேரம் இது மக்கள் தங்கள் வீடு, உணவு, பாதுகாப்பான நீர் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியேற்படும் […]

ஐரோப்பா வட அமெரிக்கா

பதவியேற்றபின் முதன்முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் ரிஷி சுனக்

  • June 7, 2023
  • 0 Comments

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ரிஷி சுனக், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2 நாட்கள் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ள ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதரும் வரவேற்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபருடன் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

இடிந்து விழுந்த கவோவ்கா அணை : எழுவரை காணவில்லை என அறிவிப்பு!

  • June 7, 2023
  • 0 Comments

கவோவ்கா அணை இடிந்து விழுந்துள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஏழுப் பேர் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. டினிப்ரோ ஆற்றி மீது கட்டப்பட்டிருந்த கவோவ்கா அணை இடிந்து விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரபரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து நேற்றைய தினம் 900இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் குறித்த […]

You cannot copy content of this page

Skip to content