அகதிகள் முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் ஒரு பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள Nablus என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின் போது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலியப் படைகள் பலாடா அகதிகள் முகாமைத் தாக்கி, தேடப்படும் போராளியின் வீட்டைச் சுற்றி வளைத்து, பாலஸ்தீனியர்களுடன் ஆயுதமேந்திய மோதல்களைத் தூண்டியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 19 வயதான ஃபரிஸ் அப்துல் முனிம் ஹஷாஷ், சண்டையின் போது இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக […]