ஐரோப்பா

பிரான்ஸில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

  • September 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்துவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவசர சிகிச்சையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதையடுத்து மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த அவரசரசிகிச்சை வைத்தியர்களான SOS Médecins பிரான்ஸில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அடுத்தகட்ட கொரோனாத் தடுப்பூசிகள் ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 28 இலிருந்து செப்டெம்பர் 3ம் திகதிக்குள் 3488 பேரிற்கும், கடந்த வாரமான செம்டெம்பர் 4ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடையில் 4067 பேரிற்கும் கொரோனா […]

செய்தி

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை – உண்மைகள் மறைக்கப்படுவது ஏன்?

  • September 16, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையின் உண்மைகள் மறைக்கப்படுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நாட்டுக்கு தேவை ஆரவார சத்தங்களோ மக்கள் கரகோசங்களோ அல்லவெனவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள், அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள், அதை அரசியலுக்குப் பயன்படுத்திய கட்சிகள் போன்றவற்றைப் பற்றிய உண்மைதான் நாட்டுக்கு இப்போது தேவை என்றும், இதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடுத்த வாரம் 2 நாள் விவாதத்திற்கான பிரேரணையை முன்வைத்து […]

இலங்கை செய்தி

சீதுவையில் பயணிகள் பையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கண்டுப்பிடிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

  சீதுவ, தண்டுகம ஓயாவில் பயணப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சடலத்தை பயணப் பையில் வைத்து யாரோ ஒருவர் தண்டுகம ஓயாவில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார், யார் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் உடனடியாக மேற்கொண்டு […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனின் கேட்விக் விமான நிலையத்தில் நெருக்கடி!! பல விமானங்கள் ரத்து

  • September 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் கேட்விக் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள விமான தாமதங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேட்விக் விமான நிலையம் கடந்த சில மணிநேரங்களில் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது மற்றும் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகி வருகின்றன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால், விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன, தாமதமாகின்றன அல்லது குறுகிய அறிவிப்பில் திருப்பி விடப்படுகின்றன. எனினும், ஊழியர் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டிலிருந்து மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக பாதுகாவலர்கள் கூறுகின்றனர். ஜூலை 14 மற்றும் ஆகஸ்ட் 06 க்கு இடையில் பட்டாம்பூச்சி பாதுகாப்பு வனவிலங்கு நிறுவனம் நடத்திய ஆய்வில், 1.5 மில்லியனுக்கும் அதிகமான பட்டாம்பூச்சிகள் மற்றும் பகல் பறக்கும் அந்துப்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 248,077 பட்டாம்பூச்சிகள் ஆராய்ச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பல இனங்கள் கணிசமாக குறைந்துவிட்டதாக நீண்ட கால மக்கள் தொகை […]

இலங்கை செய்தி

இலங்கையில் இனி பணம் அச்சிடுவது மட்டுப்படுத்தப்படும்

  • September 15, 2023
  • 0 Comments

மத்திய வங்கியையும் அதன் செயற்பாடுகளையும் மேலும் சுதந்திரமானதாக மாற்றும் வகையில் நிறைவேற்றப்பட்ட மத்திய வங்கிச் சட்டம் இன்று (15) முதல் அமுலுக்கு வரவுள்ளது. மத்திய வங்கியினால் பணம் அச்சிடுவது இனி மட்டுப்படுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் ஒரு சிறப்புப் பாதுகாப்புப் பிரச்சனை அல்லது உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சனை ஏற்பட்டால், விதிவிலக்கான சூழ்நிலையில் மட்டுமே பணம் அச்சிட அனுமதிக்கப்படுகிறது. வழங்கப்பட்ட திறைசேரி உண்டியல்களின் பெறுமதியில் 5%க்கு மிகாமல் […]

செய்தி வட அமெரிக்கா

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!! கனேடிய பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

  • September 15, 2023
  • 0 Comments

அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சில்லறை விற்பனைக் கடைகளுக்கு புதிய வரி விதிக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார். வால்மார்ட் மற்றும் காஸ்ட்கோ உள்ளிட்ட ஐந்து பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளின் தலைவர்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவசரத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ட்ரூடோ கூறினார். ‘இலாபங்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களின் முதுகில் வைக்கப்படக்கூடாது.’ என அவர் வலிறுயுத்தியுள்ளார். பொது அங்கீகார மதிப்பீடுகள் […]

ஐரோப்பா செய்தி

புலம்பெயர் குடியேற்றவாசிகளினால் இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிப்பு

  • September 15, 2023
  • 0 Comments

புலம்பெயர் குடியேற்றவாசிகளினால் இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிப்பு இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 7000 புலம்பெயர்ந்தோர் லம்பேடுசா தீவுக்கு வந்தமையே இதற்குக் காரணம். இந்த குடியேற்றவாசிகள் துனிசியாவிலிருந்து வந்தவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. லம்பேடுசா தீவின் மொத்த சனத்தொகை சுமார் 6000 எனவும், திடீரென வந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தீவின் மொத்த சனத்தொகையை விட 1000க்கும் அதிகமானதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த […]

உலகம் செய்தி

லிபியாவிற்கு சுகாதார எச்சரிக்கை!!! பேரழிவு வெள்ளம் காரணமாக 11 ஆயிரம் பேர் பலி

  • September 15, 2023
  • 0 Comments

லிபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்கள் அவசர அவசரமாக புதைக்கப்பட்டதால், மூன்று சர்வதேச சுகாதார அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமான உடல்கள் சிக்கியிருப்பதாலும், வெள்ளத்தில் இறந்தவர்களின் உடல்களாலும் உயிர் பிழைத்தவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரிடர்களின் போது, ​​இறந்தவர்களின் உடல்களால் நோய் பரவும், குடிநீரை மாசுபடுத்தும் என்ற எண்ணத்தில் இறந்தவர்களை விரைவில் புதைக்கும் போக்கு உள்ளது. இதன்படி, […]

இலங்கை செய்தி

மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து!! பலர் வைத்தியசாலையில் அனுமதி

  • September 15, 2023
  • 0 Comments

பேருந்து ஒன்று மற்றுமொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நாரம்மலவில் இருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தின் பின்னால் மற்றுமொரு பேரூந்து வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹோமாகம பிடிபன நானோ தொழில்நுட்ப நிறுவகத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக நாரம்மல மயூரபாத மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆறு […]