இலங்கை

”பொலீசார் வேடிக்கை பார்க்க திலீபனின் வாகன ஊர்தி தாக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம்” -வி.மணிவண்ணன்

  • September 17, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலீசார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி […]

ஆசியா செய்தி

கோவிலில் பெண்ணை அறைந்த இந்திய வம்சாவளி சிங்கப்பூர் வழக்கறிஞர் மீது வழக்கு

  • September 17, 2023
  • 0 Comments

இந்து கோவிலில் ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் ஒரு இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, மேலும் வேறு சில வழக்குகள் தொடர்பாக பயிற்சியில் இருந்து ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மாநில நீதிமன்றங்களால் சட்டத்தின் கீழ் நான்கு வெவ்வேறு குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பிறகு, எம்.ரவி என்று அழைக்கப்படும் ரவி மாடசாமி, டவுன்டவுன் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஒரு இந்து கோவிலில் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக ஒரு குற்றச்சாட்டு, பொது இடங்களில் […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தலாய் லாமா

  • September 17, 2023
  • 0 Comments

73 வயதை எட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தலாய் லாமா பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார், அவர் நீண்ட ஆயுளையும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் வெற்றிபெறவும் வாழ்த்தினார். தலாய் லாமா, மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஜி 20 உச்சி மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். “வசுதைவ குடும்பம் – ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற தலைப்பில் உச்சக்கட்ட உச்சி மாநாட்டில் முடிவடைந்த இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியின் வெற்றிக்காக உங்களை வாழ்த்துவதற்கு நானும் […]

இலங்கை

யாழ் பல்கலையில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல்

  • September 17, 2023
  • 0 Comments

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் இன்று (17) பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க, விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி.அபிரக்சனின் வழிகாட்டலில் இன்றைய நினைவேந்தல்கள் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

தங்களது மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தர கோரி மூன்றாது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டம் …!

  • September 17, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி மூன்றாது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த புதன்கிழடை நடைபெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுவது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க […]

ஆசியா செய்தி

துருக்கி ஹெலிகாப்டர் விபத்தில் 3 தீயணைப்பு வீரர்கள் காணவில்லை

  • September 17, 2023
  • 0 Comments

மேற்கு ரிசார்ட் நகரமான இஸ்மிருக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் ஹெலிகாப்டர் மோதியதில் இறந்த மூன்று தீயணைப்பு வீரர்களின் உடல்களை துருக்கிய டைவர்ஸ் தேடிவருகின்றனர். சனிக்கிழமை இரவு காட்டுத் தீயை அணைக்க தண்ணீர் எடுக்கும் போது ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. அணியில் மூன்று கிர்கிஸ்தான் நாட்டவர்களும் ஒரு துருக்கியரும் அடங்குவர். கிர்கிஸ்தான் தீயணைப்பு வீரர் ஒருவர் மீட்கப்பட்டு நல்ல நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். “எங்கள் ஹெலிகாப்டரில் இருந்த பணியாளர்கள், காட்டுத் தீக்கு பதிலளிக்கும் போது அணையில் விழுந்து. தங்கள் […]

பொழுதுபோக்கு

சிமாஹாவின் “தடை உடை” ஃபஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா?

  • September 17, 2023
  • 0 Comments

பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகியுள்ள ‘தடை உடை’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநரான ராகேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘தடைஉடை’. அவர் இதற்கு முன்னர் சூது கவ்வும், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பாபி சிம்ஹா, கதாநாயகியாக மிஷா ரங் உள்ளிடோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், […]

இலங்கை

திலீபனின் ஊர்திப் பவனி மீது திட்டமிட்ட தாக்குதல்: கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் கண்டணம்

  • September 17, 2023
  • 0 Comments

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனி மீது காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர். சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் எனவும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை

தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனி மீது தாக்குதல்: வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம்

  • September 17, 2023
  • 0 Comments

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம் தெரிவித்தது. தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்துள்ள வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மீள இனப்பிரச்சினையை ஏற்படுத்தி இன்னமும் சிங்களவர்களினுடைய தமிழர்கள் மீதான வன்மத்தை எடுத்துக்காட்டுகின்றது என்றது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற ஊடக […]

இலங்கை

சிறப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் – 2023

  • September 17, 2023
  • 0 Comments

திருகோணமலை- மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் நளீம் (Z.M.M.Naleem) அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் ஒழுங்கமைப்புடன் சிறப்பாக கிளிவெட்டி மகா வித்தியாலத்தில் மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தனது சிறப்புரையில் இதனை விழாவாக ஒழுங்கமைத்தமைக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிவெட்டி மகா வித்தியாலத்தின் அதிபர் கோணேஸ்வரராசா (P.Koneswararasa) ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருகோணமலை வலயத்தின் வலய கல்விப் […]