ஐரோப்பா

வாக்னர் போராளிகளுக்கு ஒரு “பொறியை” அமைக்கிறாரா புட்டின்? : நிபுணர்களின் கருத்து என்ன?

  • June 27, 2023
  • 0 Comments

பெலாரஸை பாதுகாப்பான புகலிடமாக முன்வைப்பதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்னர் போராளிகளுக்கு ஒரு “பொறியை” அமைத்துக் கொண்டிருக்கலாம் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. அண்டை நாட்டிற்கு தப்பிச் செல்லும் பணியாளர்களை “அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டாலும், ” துரோகிகளாகவே  கிரெம்ளின் கருதும் என்று போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) கூறியது. “வாக்னர் போராளிகளின் புகலிடமாக பெலாரஸை புடின் ஒரு பொறியாகக் காட்டலாம். பெலாரஸ் சென்ற வாக்னர் பணியாளர்கள் அங்கு […]

இலங்கை

கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்

கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக ஞானகுணாளன் போல் ரொஷான் கடமைகளை பொறுப்பேற்றார். வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான், மருத்துவ நிர்வாக முதலாம் நிலை கலாநிதி பட்ட பயிற்சியினை (M.D. in Medical Administration Part 1) நிறைவு செய்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் மொறவெவ ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றினார்.   காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பின்தங்கிய […]

இலங்கை

ஐந்து வருடத்தில் 17 பில்லியன் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி!

  • June 27, 2023
  • 0 Comments

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் ஐந்து வருடங்களில் 17 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக,  ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி மொத்த வெளிநாட்டு கடன்களான 41.5 பில்லியன் டொலர்களில் 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி […]

இலங்கை

விடுமுறை நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

  • June 27, 2023
  • 0 Comments

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை சனிக்கிழமை (ஜூலை 01) காலை 9.30 மணிக்கு கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், கொழும்பிற்கு வெளியே பயணிக்க வேண்டாம் என ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே   கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நாளைய தினம் (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அது வெள்ளிக்கிழமை (30) பாராளுமன்றத்திலும் பொது நிதிக் குழுவின் (COPF) முன்னிலையிலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]

இலங்கை

மடு- 2ம் கட்டை பகுதியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம்..!

  • June 27, 2023
  • 0 Comments

மடு பொலிஸ் பிரிவில் உள்ள மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(26)  இரவு நேர ஆராதனை யை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிறிஸ்தவ மத போதகர் ஆமோஸ் என்பவரின் மோட்டார் சைக்கிளை இடை மறித்த நபர்கள் அவர்களிடம் இருந்த பெறுமதியான பொருட்களை கத்தி முனையில் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து கிறிஸ்தவ மத போதகர் ஆமோஸ் மேலும் தெரிவிக்கையில், மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(26) […]

இலங்கை

நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு : வவுனியாவில் மக்கள் போராட்டம்

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா-ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது. இன்று (27.06) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

ஐந்து தலை நாகம் படமெடுக்க கிழக்கிலங்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றாள் நாககன்னி…

  • June 27, 2023
  • 0 Comments

திருகோணமலை – அலஸ்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தான்தோன்றி ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்ததாகும். இவ்வாலயத்தின் வருடாந்த கும்பாபிஷேகம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதாவது 27 அடி உயரமான நாகம்மன் சிலை இலங்கையின் திருகோணமலையில் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக பிரதம குரு தெரிவித்தார். ஐந்து தலை நாகம் படமெடுப்பதும், அம்மன் நாகத்தின் மேல் அமர்ந்து காட்சி தருவதும் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாகவும், கண்கொள்ளா காட்சியாகவும் உள்ளது.    

இலங்கை

கட்டுநாயக்கவில் 15 பெரிய தங்க ஜெல்களுடன் கைதான ஐவர்

  • June 27, 2023
  • 0 Comments

15 பெரிய தங்க ஜெல்களை தயாரித்து மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 05 வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று சுங்க ஊடகப் பேச்சாளரும், பிரதி சுங்கப் பணிப்பாளருமான .சுதத்த சில்வா தெரிவித்தார். இவர்கள் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 05 வர்த்தகர்களாவர்.இன்று பிற்பகல் 01.55 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E.1176 […]

இலங்கை

போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் குச்சவெளி பிரதேச மக்கள்

  • June 27, 2023
  • 0 Comments

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை பகுதியில் உள்ள மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர். தமது கிராமத்திலிருந்து நோயாளர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வதற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்தும் சாரதிகள் உரிய நேரத்துக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இக்கிரமத்தில் அதிகளவிலான வயோதிபர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை கிளினிக் செல்ல வேண்டியுள்ளதாகவும் செல்வதற்கு போக்குவரத்து இல்லாமையினால் அவதிப்பட்டு வருவதாகவும் அக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். அரசாங்கத்தினால் அரச […]

இலங்கை

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உட்பட அழைக்கப்பட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் […]

You cannot copy content of this page

Skip to content