வட அமெரிக்கா

Uber செயலியை பயன்படுத்தி 800 இந்தியர்களை அமெரிக்கா கொண்டு சேர்த்த நபர்..

  • June 29, 2023
  • 0 Comments

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபர் ரஜிந்தர் பால் சிங் என்ற ஜஸ்பால் கில் (49). இவர், கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை கொண்டுசென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஜஸ்பால் கில், அதன் மூலம் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டியதாக கூறப்படுகிறது. வாகன சவாரிக்கான uber செயலியை பயன்படுத்தி, இந்தியர்களை அமெரிக்காவுக்குள் இவர் வாகனங்களில் அழைத்துச்சென்றதும் தெரியவந்திருக்கிறது. சுமார் 4 […]

ஐரோப்பா

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தடுமாற்றத்துடன் பதிலளித்த பைடன்!

  • June 29, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் செய்தியாளர்களின் கேள்விக்கு தடுமாற்றதுடன், பதிலளிப்பது அமெரிக்கர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது. அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) இல் நடைபெறவுள்ளது. இதற்காக பைடன் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு சிகாகோ சென்றிருந்த அவரிடம், உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் வாக்னர் படையினர், திடீரென மொஸ்கோவிற்கு எதிராக திரும்பினர். இதனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பலவீனமடைந்துள்ளரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பைடன், ‘உண்மையில் சொல்வது கடினம். […]

இலங்கை

சந்தேகத்தின்பேரில் இரு இளைஞர்களை வீடு புகுந்து தாக்கிய 50க்கும் மேற்பட்டோர்

  • June 29, 2023
  • 0 Comments

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற சந்தேகித்த இளைஞர் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தனர் என்றும் பொலிஸார் கூறினர். புத்தூர் […]

ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

  • June 29, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ட்ரஸ்ஸல் டிரஸ்ட்’  என்ற உணவு வங்கித் தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர்,  உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும்,  வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும்,  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து […]

ஆசியா ஆஸ்திரேலியா

அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை

  • June 29, 2023
  • 0 Comments

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரியில் பதவி விலகினார். அவருக்கு பின்னர் நாட்டின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார். அவர் பதவியேற்புக்கு பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக நியூசிலாந்து உள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில் இந்த பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. டியான்ஜினில் நடைபெற்ற உலக […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ள மஹிந்த!

  • June 29, 2023
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில், சமூர்த்தி அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே மகிந்த ராஜபக்ஷ மேற்படி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த […]

ஐரோப்பா

பற்றி எரியும் பிரான்ஸ் : ஒரே இரவில் 150 பேர் கைது!

  • June 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 17 வயதான இளைஞர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது நாளாக பிரான்சில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (29.06) அமைச்சரவை நெருக்கடிக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்ட டர்மனின் “தாங்க முடியாத வன்முறை […]

வட அமெரிக்கா

இறந்தவர்களின் உடல்களுடன் மீட்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பல்

  • June 29, 2023
  • 0 Comments

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக தகவல் வெளியாகிள்ளது. அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான […]

இலங்கை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

  • June 29, 2023
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (ஜூன் 29) வீதி விபத்தொன்றில் சிக்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை புத்தளம் முந்தலம பிரதேசத்தில் வைத்தே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த விஜயகலா மகேஷ்வரன் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள், வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

இலங்கை

லொத்தர் சீட்டுக்களின் வி்லை அதிகரிப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவை தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. இதன்மூலம், என்எல்பி மற்றும் டிஎல்பி லாட்டரி சீட்டுகளின் விலை 20 ரூபாயில் இருந்து 40ரூபாய் வரை  இருந்து உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தம் வரும் ஜுலை 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகுிறது.  

You cannot copy content of this page

Skip to content