ஆசியா

சிங்கப்பூரில் குளியலறையில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • October 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும்போது தாம் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தாய் செங்கில் உள்ள Strength Masters உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளத. இதனால் அச்சத்தில் உறைந்துபோன 26 வயதான Drealya Tan என்ற பெண், இரண்டு நாட்களுக்கு தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை என தெரியவந்துள்ளது. மேலும், தனது அந்தங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒன்லைனில் பகிரப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர் உடைந்துபோனதாகவும் […]

இலங்கை

இலங்கையின் பிரபல கலைஞர் ஜெக்‌சன் எண்டனி காலமானார்

  • October 9, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் எந்தனி தனது 65 வயதில் காலமானார். விபத்தொன்றில் படுகாயமடைந்து 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜெக்‌சன் எண்டனி தமிழர்களுக்கும் பரீட்சயமான ஒரு சிறந்த கலைஞராக விளங்கினார். கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணம் அதிகரிப்பு? விடுக்கப்பட்ட கோரிக்கை

  • October 9, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் உதவி பணம் அதிகரிப்பட வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. சமூக உதவி பணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது 100 யுரோ வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள அதி உயர்வான பணவீக்கம் காரணமாக சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தமது நாளாந்த செலவுகளை ஈடு செய்வதில் சிரமத்தை எதிர் கொள்கின்றார்கள். இதனை ஈடுசெய்வதற்காக மாதம் ஒன்றுக்கு தலா 100 யூரோக்களை வழங்க வேண்டும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பல வருட பிரச்சினைக்கு தீர்வு – பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசி

  • October 9, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சின்னம்மை நோயை ஒத்த chickenpox virus நோய்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் அற்றவர்களில் மூன்றில் ஒருவருக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. சிறிய சிவப்பு நிற பருக்கள் உடலில் தோன்றும் இந்த நோய் உடலில் மிகுந்த வலியை ஏற்படுத்துவதோடு, உடல் சோர்வையும் ஏற்படுத்துகிறது. இந்த நோய்த்தொற்றுக்கு நிவாரண மருந்துகள் இருந்தாலும், அவை நூறு வீதம் நிவாரணம் அளிப்பதில்லை. அனால் அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது. […]

இலங்கை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

  • October 9, 2023
  • 0 Comments

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி(Cheriyapani) கப்பல், நேற்றும் இன்றும் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. 14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் […]

உலகம் செய்தி

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இளம் யுவதி

  • October 8, 2023
  • 0 Comments

ஹமாஸ் தீவிரவாதிகளால் 25 வயது பெண் கடத்தப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. காணாளியில், நோவா ஆர்கமணி தாக்கியவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து தனது உயிருக்காக மன்றாடுவதைக் காட்டுகிறது. “என்னைக் கொல்லாதே! வேண்டாம், வேண்டாம், வேண்டாம்” என்று கூச்சலிடும் போது குறித்த யுவதி ஆயுததாரிகளால் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டதை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவரது காதலன் அவி நாதன் ஹமாஸால் எப்படி கொடூரமாக கையாளப்படுகிறார் என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது அவரது காதலனையும் […]

இலங்கை செய்தி

அரச வங்கிகளின் மறுசீரமைப்பு தொடர்பில் உடன் தெளிவுப்படுத்த வேண்டும்

  • October 8, 2023
  • 0 Comments

அரச வங்கிகளின் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தெளிவான அறிக்கையை முன்வைக்க வேண்டும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கோருகின்றது. அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பிரிவினரும் மத்திய வங்கியின் ஆளுநரும் இது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்ட கருத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஒன்றிய செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரச வங்கிகள் மீது உத்தியோகபூர்வ உரிமைகளைக் கொண்ட நிதி அமைச்சும் அதன் செயலாளரும் நாட்டுக்கு அவசர விளக்கம் அளிக்க […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தம்மிக்க பெரேரா

  • October 8, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகரான தம்மிக்க பெரேரா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 51 சதவீத வாக்குகளைப் பெறுவது உறுதியானால் மட்டுமே தாம் வேட்பாளராக இருப்பேன் என அவர் ‘தேசய’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். மேலும் விளக்கமளித்த பெரேரா, தனது வேட்புமனு மீது பெரும்பான்மையான கட்சிகளிடையே ஒருமித்த கருத்து, தேர்தலில் தனது வாய்ப்புகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றார். தாம் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யாக இருந்ததைக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் […]

இலங்கை செய்தி

சந்தியாவின் போராட்டம் 5000 நாட்கள்: சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை

  • October 8, 2023
  • 0 Comments

தனது கணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராட்டம் 5000 நாட்களைத் தாண்டியுள்ளது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். தனது 5000 நாள் முடிவில்லாப் போராட்டத்தை நினைவுகூர்ந்த அவர், அக்டோபர் 4ஆம் திகதி கொட்டாவ, தனது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது கணவருக்கு நீதி கிடைக்க 5000 நாட்கள் பாடுபட்டு அவமானங்களையும், ஏளனங்களையும் அனுபவித்ததாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். நீதியை எதிர்பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக, சர்வதேச […]

இலங்கை செய்தி

கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் தமிழ் கட்சிகள்

  • October 8, 2023
  • 0 Comments

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் கட்சிகள் அதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, ஆர் சித்தார்த்தன் தலைமையிலான புல்லட், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் கட்சிகள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வனுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.