இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – திருடச்சென்ற இளைஞனை அடித்துக் கொன்ற பிரதேச மக்கள்

  • July 3, 2023
  • 0 Comments

சூரியவெவ – வெவேகம பகுதியில் திருடச் சென்ற இளைஞரொருவரை பிரதேச மக்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று அதிகாலை மேலும் இருவருடன் காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களால் குறித்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சூரியவெவ பொலிஸ் அதிகாரிகள் வந்த போது சந்தேகநபரின் உடல்நிலை மோசமடைந்திருந்ததை அடுத்து அவர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞர் மாத்தறை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள் – பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை வெளியானது

  • July 3, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில், ஜெர்மனியை விட அமெரிக்கா மற்றும் சீனாவில் மட்டுமே அதிக பணக்காரர்கள் அதிகம் உள்ளனர். பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் வருடாந்திர உலகளாவிய செல்வ அறிக்கையில் ஜெர்மனிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 150 செல்வ ஆலோசகர்களின் தரவுகளின் அடிப்படையில் மற்றும் உலகம் முழுவதும் உள்ள செல்வப் போக்குகளை ஆய்வு செய்யும் அறிக்கையின்படி, ஜெர்மனியின் பெரும் பணக்காரர்களின் மக்கள்தொகை அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் […]

ஐரோப்பா

பிரான்ஸை உலுக்கிய வன்முறை – பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு

  • July 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கலவரம் அடக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இதனால் வன்முறையாளர்கள் தங்களது எல்லையை மீறியுள்ளதாக கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Nîmes (Gard) நகரில் இடம்பெற்றுள்ளது. வன்முறையினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. 9 மில்லி மீற்றர் அளவுடைய துப்பாக்கி சன்னம் அதிகாரி மீது பாய்ந்த நிலையில், அவரது குண்டு துளைக்காத ஆடையில் பட்டு தெறித்துள்ளது. அதிகாரி காப்பாற்றப்பட்ட போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு […]

ஆசியா

சிங்கப்பூரில் இரகசிய கமரா பொருத்திய பவர் பேங்கைப் பயன்படுத்தி நபர் செய்த அதிர்ச்சி செயல்

  • July 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இரகசிய கமரா பொருத்திய பவர் பேங்கைப் பயன்படுத்தி நபர் செய்த அதிர்ச்சி செயல சிங்கப்பூரில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட பவர் பேங்கைப் பயன்படுத்தி நபர் ஒருவர் செய்த மோசமான சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜோஹன் விஜயா என்ற அந்த நபரின் நடத்தை கடந்த ஆண்டு தான் தெரியவந்தது, அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இந்தோனேசியாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரக் குடியிருப்பாளரான அவர், தனக்கு சொந்தமான மடிக்கணினி […]

இலங்கை

இலங்கை ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – சுற்றிவளைக்க தயாராகும் அதிகாரிகள்

  • July 3, 2023
  • 0 Comments

இலங்கை ரயில் பயணிகள் பயணச்சீட்டு இன்றி பயணித்தால் கண்டுபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 403 பயணிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக அதன் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஏ.ஜி.அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி அவர்களிடமிருந்து 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக […]

இலங்கை செய்தி

ஜப்பானில் பெரும் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட மாகல்கந்தே சுதத்த தேரர்

  • July 2, 2023
  • 0 Comments

வணக்கத்திற்குரிய மாகல்கந்தே சுதத்த தேரரின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. சுதத்த தேரர் ஒரு இளைஞனை தனது அறையில் மறைத்து வைத்திருந்த போது அவரது குடும்பத்தாரால் பிடிக்கப்பட்டு பல பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

பெண்கள் ஆடையை அணிவித்து வீதியில் கைவிடப்பட்டுச் சென்ற முதியவர்

  • July 2, 2023
  • 0 Comments

பெண் போன்று தோற்றமளிக்கும் வகையில் நீளமான ஆடையை அணிந்து நாத்தண்டி வெலிபன்னாகஹமுல்ல சந்தியில் கைவிட்டுச் சென்ற வயோதிபர் ஒருவர் துனகதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தை சேர்ந்த வயோதிபரை உடுபத்தாவ உள்ளூராட்சி சபையின் பணி நிர்வாகி ரொஷாந்த மனோஜ் அரவிந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 70 – 75 வயதுக்கு இடைப்பட்டவர் என மதிப்பிடப்பட்ட இந்த ஆடவர் கண்டுபிடிக்கப்பட்ட போது, ​​அவர் அணிந்திருந்த பெண்களின் ஆடைகள் மலத்தால் மூடப்பட்டிருந்தன. தரையில் படுத்து புலம்பிக்கொண்டிருந்த நபரை சுற்றியிருந்த […]

செய்தி

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய மூவர் கைது

  • July 2, 2023
  • 0 Comments

அச்சுவேலி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தடியால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் இன்று (2) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் சொத்துக்கள் திருடப்படுவதாகவும், கிடைத்த தகவலுக்கு அமைய அந்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை சந்தேகநபர்கள் தடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். சம்பவத்தையடுத்து தப்பியோடிய சந்தேகநபர்கள் மூவரும் நீர்வேலி மற்றும் மடத்தடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உலகம் செய்தி

ஸ்வீடனில் குராஆன் எரிப்பு சம்பவம்!!! ஓஐசி கடும் எதிர்ப்பு

  • July 2, 2023
  • 0 Comments

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் குரான் பிரதியை எரித்ததற்கு முஸ்லிம் நாடுகளின் குழுவான OIC எதிர்ப்பு தெரிவித்தது. 57 முஸ்லீம் நாடுகளில் உறுப்பினராக உள்ள OIC, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை கோரியது. முஸ்லீம் எதிர்ப்பு இயக்கங்களை எதிர்த்து சர்வதேச அளவில் சட்டத்தை அறிமுகப்படுத்த உலக நாடுகளின் ஆதரவை OIC அழைப்பு விடுத்துள்ளது. ஸ்வீடன் சம்பவம் OIC ஆல் கூட்டப்பட்ட ஒரு அசாதாரண கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களை பார்க்க வேண்டும் என்று […]

இலங்கை செய்தி

ரணில் அரசாங்கத்திற்கு நாம் ஆதரவளித்து வருகிறோம்!! மகிந்த

  • July 2, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பற்றியோ, இன்னும் அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றியோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. ஒரு தரப்பினர் ரணிலுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் உள்ளனர். கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என மகிந்த ராஜபக்சவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். […]

You cannot copy content of this page

Skip to content