ஐரோப்பா

பிரித்தானியா- புயலால் அடித்துச் செல்லப்பட்டு புல்வெளியில் இறங்கிய விமானம்… பயணிகள் அலறல்

  • October 21, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை புரட்டிப் போட்டுள்ள புயலில் சிக்கிய விமானம் ஒன்று, தரையிறங்கும்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியாவை ‘Babet’ என்னும் புயல் துவம்சம் செய்துவருகிறது. புயலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுமார் 4,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும், சில இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடப்பதையும் காட்டி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளை தாக்கிய சக்திவாய்ந்த புயல் : நால்வர் உயிரிழப்பு!

  • October 21, 2023
  • 0 Comments

பிரிட்டன், வடக்கு ஜெர்மனி மற்றும் தெற்கு ஸ்காண்டிநேவியாவில் இன்று (21.10) காலை புயல் தாக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புயல் காரணமாக கனமழை பெய்ததுடன், மின் தடை, விமானங்கள் ரத்து என பலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் பாபெட் என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாக […]

இந்தியா

ஸ்மார்ட் போனுக்காக அண்ணன் செய்த செயல்… உண்மையை கண்டுபிடித்த தம்பி!

  • October 21, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் ஸ்மார்ட் போன் வாங்க பணம் தரவில்லையென்று மகன், தாயை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலாபாய் குலாப்ராவ் பத்வைக் (47) என்பவருக்கு ராம்நாத் குலாப்ராவ் பத்வைக், தீபக் பத்வைக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆன நிலையில் மூத்த மகனின் வீட்டில் தாய் கமலாபாய் வசித்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் தாய் கமலாபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தீபக்கிற்கு தெரியவர, அவர் பார்ப்பதற்கு […]

உலகம்

கோர்சிக்கா தீவுகளில் சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவர் பலி

பிரான்ஸிற்கு அருகாமையில் அமைந்துள்ள கோர்சிக்கா தீவுகளில் சுவிட்சர்லாந்து பிரஜைகள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காட்டுப்பகுதி ஒன்றில் முகாமிட்டிருந்தபோது இந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

ஐரோப்பா

காசா மருத்துவமனை வெடிவிபத்து:பிரான்ஸ் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்

  • October 21, 2023
  • 0 Comments

காசா மருத்துவமனை வெடிவிபத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறியுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் உளவுத்துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது. காசா பகுதியிலுள்ள, அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் நிகழ்ந்த வெடிவிபத்தொன்றில் பலர் கொல்லப்பட்டார்கள்.முதலில் 500 பேர் வரை கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது 471 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால், அமெரிக்க உளவுத்துறையோ, 100 முதல் 300 பேர் வரை பலியாகியிருக்கலாம் என கணக்கிட்டுள்ளது.தாக்குதலை […]

ஐரோப்பா

இணைய பாதுகாப்பை உயர்த்திய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

  • October 21, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  இணைய பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நெதர்லாந்தின் “ஹோஸ்ட் ஸ்டேட்” மற்றும் வெளிப்புற சைபர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுந்த நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள், உளவு பார்க்கும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட மற்றும் அதிநவீன தாக்குதலைக் குறிக்கிறது” என ஐசிசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “எனவே இந்தத் தாக்குதலை நீதிமன்றத்தின் ஆணையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தீவிர முயற்சியாக விளக்கலாம் என்றும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட […]

இலங்கை

நிதியமைச்சுக்கு கீழுள்ள நிறுவனங்களுக்கு பணியாளர்களை இணைத்தல் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நிதியமைச்சுக்கு கீழுள்ள நிறுவனங்களுக்கு பணியாளர்களை இணைத்துக் கொள்ளும் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தெரணியகல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி பற்றிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

உக்ரைனில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மசோதா

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்த மசோதாவை ஏற்றுக்கொள்ள உக்ரைனின் இளைஞர் மற்றும் விளையாட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு “உடனடி இழப்பீடு” மற்றும் தங்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவை வழங்குவதற்கான சட்ட அடிப்படையை தீர்மானிக்க உதவும் பல சட்ட முன்மொழிவுகளை பட்டியலிட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையை உக்ரைன் அமைச்சர்கள் அமைச்சரவை தீர்மானிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!

  • October 21, 2023
  • 0 Comments

பதுளை-கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பல மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவு காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த வீதிப் பகுதிக்கு இடையில் 03 இடங்களில் பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் இவ்வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது பெய்து […]

மத்திய கிழக்கு

வெளிநாடுகளில் சொகுசாக வாழும் ஹமாஸ் தலைவர்கள் … இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

  • October 21, 2023
  • 0 Comments

ஹமாஸ் தலைவர்கள் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு காசா மக்களின் தலைவிதியை கட்டுப்படுத்துகின்றனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள முக்கிய வீடியோவில், “ காசாவில் இருந்து 1800 கி.மீ தொலைவில் உள்ள தோஹா நகரில் பல ஹமாஸ் தலைவர்கள் சொகுசுவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து ஹமாஸை கட்டுப்படுத்தி இஸ்ரேல் மற்றும் காசா மக்களை நரகத்தில் தள்ளுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான […]