அறிவியல் & தொழில்நுட்பம்

Ai தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

  • July 14, 2023
  • 0 Comments

உலகில் சுமார் 27% வேலைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் தானியங்கி மயமாக மாற்றப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. OECD எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. OECD என்பது 38 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இதில் பெரும்பாலும் செல்வந்த நாடுகளே இணைந்து இருக்கிறது. ஆனால் மெக்சிகோ மற்றும் எஸ்டோனியா போன்ற சில வளர்ந்து வரும் நாடுகளும் இதில் இருக்கிறது. இதுவரை ஏஐ தொழில்நுட்பத்தால் பிறருடைய வேலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது […]

இலங்கை

ONMAX DT திட்டத்தின் மூலம் பணமோசடி : 95 வங்கி கணக்குகள் முடக்கம்!

  • July 14, 2023
  • 0 Comments

ONMAX DT பிரமிட் திட்டத்தைச் சேர்ந்த 95 வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த  நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட ஆறு நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி  கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வங்கிக்கணக்குகளில் 790 மில்லியன் தொகை காணப்பட்டதாகவும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 95 கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிவேக இணைய சேவை – 6G வழங்க தயாராகும் அரசாங்கம்

  • July 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 6G தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளுக்ளு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்துக்கான இணையம்’ என தெரிவிக்கப்பட்டும் இந்த 6G இணைய வேகமானது 5G தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமாகும். பிரான்சில் சில 5G இணையம் வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட முற்றுப்பெறாத நிலையில், இந்த புதிய 6G இணையத்தினை வழங்க அரசு தயாராகி வருவதாக தொழிற்ல்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2030 ஆம் ஆண்டினை இலக்கு வைத்து இந்த […]

இலங்கை

ஆய்வக எலியாக மாறிய மக்கள் : பல உயிரிழப்புகள் பதிவாகும் என எச்சரிக்கை!

  • July 14, 2023
  • 0 Comments

கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் இலங்கைக்கு பதிவு செய்யப்படாத 785 வகையான மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யார் சிகிச்சை எடுத்தாலும் நோயாளிகள் பலர்  உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். புதிய மருந்துகளை ஆர்டர் செய்வதற்கு கால அவகாசம் எடுக்கும் எனத் தெரிவித்த அவர்,  அதுவரை இறக்குமதி செய்யப்பட்ட குறித்த மருந்துகளையே பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நோயாளிகள் பலர் உயிரிழக்க வேண்டிய துர்பாக்கிய […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை – தொழில் கற்க 2500 யூரோ கொடுப்பனவு

  • July 14, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பயிற்றப்பட் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால் வெளிநாடுகளில் இருந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வரவழைப்பதற்கு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களில் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து இவ்வாறான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மன் நாட்டுக்கு உள்வாங்குவதற்காக கடந்த கிழமை ஜெர்மன் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் தற்பொழுது கைத்தொழில் தொடர்பான விடயத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதன் காரணத்தினால் இவ்வாறு ஜெர்மனியில் உள்ளவர்கள் […]

உலகம்

உலகம் 2030 ஆண்டில் எய்ட்ஸ் தொற்றை முடிவுக்கு கொண்டுவரும்!

  • July 14, 2023
  • 0 Comments

2030 ஆம் ஆண்டளவில் உலகம் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வரலாம். அல்லது புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை குறைக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அதன் உச்சத்திலிருந்து 59% குறைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்ததுள்ளதாகவும்,  தடுப்பு மற்றும் சிகிச்சையில் கணிசமான முதலீடு செய்வதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030க்குள் எச்.ஐ.வி தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், உண்மையில் சில நாடுகள் அந்த வழியில் […]

ஆசியா

சிங்கப்பூரில் 400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கத் திட்டம்!

  • July 14, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் Deel நிறுவனம் தலைமை அலுவலகத்தைத் திறக்கவுள்ள நிலையில் 400 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனிதவள நிறுவனமான Deel நிறுவனம், சர்வதேச நிறுவனங்கள் கேட்கும் எண்ணிக்கையிலும், அந்த நிறுவனங்கள் வரையறுக்கும் திறன்மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்து, சம்மந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது. Deel நிறுவனம் அனுப்பும் ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள், அதற்கான சேவைக் கட்டணங்களை Deel நிறுவனத்துக்கு […]

இலங்கை

இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு மின்சார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!

  • July 14, 2023
  • 0 Comments

நாடு முழுவதிலும் உள்ள பல பிரதான வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை,  மின்சார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அந்த மருத்துவமனைகளின் இயக்குநர்களுக்கும் தொலைநகல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்படி, நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை நாளைக்கு முன் கட்டாவிட்டால், மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் 66 மில்லியன் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • July 14, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர்ப்பம்பி நிலையங்களுக்காக மின் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையான 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

  • July 13, 2023
  • 0 Comments

இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் “DIGIECON 2030” வேலைத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் நாட்டில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப தரங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவுச் சட்டம் கொண்டு வரப்படும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் பட்டதாரிகளுக்கு ஆறு மாத தகவல் தொழில்நுட்பப் […]

You cannot copy content of this page

Skip to content