வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க இராணுவ அதிகாரி
அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் வடகொரியாவுக்குள் நுழைந்துள்ளார். அவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் உள்ள இராணுவ மயமாக்கப்பட்ட வலயத்தின் ஊடாக குறித்த இராணுவ வீரர் வடகொரியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அதிகாரியின் ஒழுக்கமற்ற செயலால், அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டது. அதற்காக அவர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது அவர் காவலர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.