இலங்கை

சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

  • July 21, 2023
  • 0 Comments

திருகோணமலை -கந்தளாய் பகுதியில் கலை நிகழ்வொன்றில் மோட்டார் சைக்கிள் சாகசம் காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (20) இடம் பெற்றுள்ளது. கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 17ம் திகதி தொடக்கம் கலை நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்த நிலையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு […]

இலங்கை

மாத்தறையில் 80 இலட்சம் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது!

  • July 21, 2023
  • 0 Comments

மாத்தறையில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான அம்பருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 08 கிலோ பெறுமதியுடைய இவ்விரு சந்தேசநபர்களையும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று (20.07) கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மிரிஸ்ஸ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரும் வெலிகம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பர் எனப்படும் பொருள் திமிங்கலங்களின் உடலிலிருந்து பெறப்படுகிறது. இந்த […]

இலங்கை

இலங்கையில் சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!

  • July 21, 2023
  • 0 Comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் கோருவது சிக்கலாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்  இன்று (21.07) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு 15,000 ரூபா கட்டணமாகவும், பரீட்சை கட்டணமாக 1,200 ரூபாவும் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

‘புராஜெக்ட் கே’னா என்ன தெரியுமா?? ரிலீஸ் ஆனது கிளிம்ப்ஸ் வீடியோ

  • July 21, 2023
  • 0 Comments

மகாநதி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாக் அஸ்வினுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் புராஜெக்ட் கே. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இதுதவிர இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்தார். அவர் இப்படத்தில் வில்லனாக […]

செய்தி

மகாவலி ஆற்றில் குதித்த கைதி மாயம்..!

  • July 21, 2023
  • 0 Comments

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரியும் குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன 36 வயதுடைய நபர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன கைதியை தேடும் பணியில் […]

தென் அமெரிக்கா

பெருவில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம்..

  • July 21, 2023
  • 0 Comments

பெரு அதிபர் டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ, காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டினா பொலுவார்டே,எதிர்க்கட்சி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை விடுவிக்ககோரியும், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 60க்கும் பேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலைநகர் லிமாவில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிஸார் […]

இலங்கை

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

  • July 21, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பான முறையில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சு பொறுப்புடன் செயற்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல சம்பத் இதனை தெரிவித்தார். அத்துடன் ஒளடதங்களின் தரம் குறித்து நோயாளர்களுக்கு உறுதியளிப்பதோடு, வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு நோயாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் […]

செய்தி

காதல் மோசடி புகார் எதிரொலி… விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன்

  • July 21, 2023
  • 0 Comments

பிக்பாஸ் விக்ரமன் காதலிப்பதாக கூறி பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்த கிருபா முனுசாமி என்பவர் கொடுத்த மோசடி புகார் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த […]

வாழ்வியல்

மன அழுத்தத்தால் பாதிப்பா? பாதுகாக்கும் உணவுகள்

  • July 21, 2023
  • 0 Comments

காரணமின்றி அடிக்கடி கோபம், எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்களை எதிர்கொள்கிறீர்களா? உங்களுடைய விடை ஆம் என்றால், இது செரோடோனின் பற்றாக்குறையின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இன்று செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் பற்றி பார்க்க போகிறோம். இதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். செரோடோனின் ஹார்மோனை அதிகரிக்கவும், மன ஆரோக்கியத்தை பராமரிக்கவும் ஒரு சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இது போன்ற உணவுகள் மூளையின் […]

வட அமெரிக்கா

கனடாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானிக்கு நேர்ந்த துயரம்

  • July 21, 2023
  • 0 Comments

கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணித்த விமானி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினத்திலிருந்து அந்த ஹெலிகாப்டரைக் காணவில்லை என்று கூறப்பட்டது. ஆல்பர்டா மாநிலத்தின் Haig ஏரிக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தீயணைப்புப் பணிகளின்போது அது நிலத்தில் மோதியதாகத் தெரிகிறது. அது குறித்து விசாரிக்கப்படுகிறது. ஹெலிகொப்டரில் 41 வயது விமானி மட்டுமே இருந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். விமானி நாட்டிற்கு ஆற்றிய சேவையை […]

You cannot copy content of this page

Skip to content