மத்திய கிழக்கு

காசாவில் காயமடைந்த குழந்தைகளை வெளியேற்றும் துருக்கி!

  • November 24, 2023
  • 0 Comments

துருக்கி தனது மூன்றாவது சுற்று வெளியேற்றத்தின் ஒரு பகுதியாக இன்று (24.11) சில காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களை காசாவில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர்   ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்தார். துருக்கி இதுவரை 150 நோயாளர்களை வெளியேற்றியுள்ளது.  அங்காராவின் எசன்போகா விமான நிலையத்தில் பேசிய கோகா, நோய்வாய்ப்பட்ட மூன்று காசான் குழந்தைகள் வியாழன் அன்று துருக்கிக்கு அழைத்து வரப்பட்டதாக கூறினார். 2 வயது சிறுவன் மற்றும் 9 மற்றும் 10 வயதுடைய […]

ஐரோப்பா

அயர்லாந்தில் கத்திக்குத்து : 03 குழந்தைகள் உள்பட ஐவர் காயம்!

  • November 24, 2023
  • 0 Comments

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் நேற்று (23.11) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 03 குழந்தைகள் உள்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நகர மையத்தில் கலவரத்தை தூண்டியதாகவும், இது  பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்பது உட்பட எந்த நோக்கத்தையும் காவல்துறை இன்னும் நிராகரிக்கவில்லை எனறும் நகர மேயர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவத்தினால்  பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்  தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த கலகத் தடுப்புப் பொலிஸாருக்கும் குடியேற்ற எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பிரதான நகரங்களில் பாரிய அச்சுறுத்தலாக மாறிய எலிகள்

  • November 24, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சில கடலோர நகரங்களில் எலிகள் படையெடுத்து பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கரும்பா, நார்மன்ட்டன் நகரங்களில் எலிகள் எங்கும் காணப்படுவதாகக் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். எலிகள் கார்களில் உள்ள கம்பிவடங்களைக் கடித்துவிடுவதாகவும் செல்லப்பிராணிகளை அச்சுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடற்கரைகளில் அன்றாடம் பல எலிகள் மாண்டுகிடக்கக் காணப்படுவதாக மீனவர்கள் கூறினர். அவை கடலில் கலந்துவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இறந்துகிடக்கும் எலிகளால் கடற்கரையில் துர்நாற்றம் வீசுகிறது. கடற்கரைகளைச் சுத்தம்செய்ய அதிகாரிகள் முயல்கின்றனர். ஆஸ்திரேலியாவில் பெரு மழை பெய்துள்ளதால் அதிகப் […]

இலங்கை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீனிக்கு தட்டுப்பாடு!

  • November 24, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது கடுமையான சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் சீனியானைது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். இதன்படி இலங்கையின் சில பகுதிகளில் ஒரு கிலோ வெள்ளை சீனி 320 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதுடன்ன,  ஒரு கிலோ பிரவுன் சீனியின் விலை 370 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு நபருக்கு ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே கடைக்காரர்கள் வழங்குகிறார்கள். இதேவேளை, சீனியின் […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

  • November 24, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டிற்கு பிரதமர் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார். யூதர்களுக்கு எதிராக செயல்பட்ட ஹிட்லரின் நாஜிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹாமாஸ் தலைவர்கள் பலர் கத்தார், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடி […]

இலங்கை

வவுனியாவில் குளங்கள் நிரம்பி வழிவதால் கவலையில் விவசாயிகள்!

  • November 24, 2023
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி வழிவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர தெரிவித்தார். வவுனியாவில் பாவற்களம் உட்பட விவசாய சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள 415 குளங்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குளங்கள் நிரம்பி வழிவதால் வவுனியா மகாகன்னாவில் பயிரிடப்பட்டிருந்த பெருமளவிலான நெற்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் […]

ஆசியா

சீனாவில் அச்சுறுத்தும் சுவாசத் தொற்று – தகவல் கோரும் WHO

  • November 24, 2023
  • 0 Comments

சீனாவில் சுவாசத் தொற்று நோய்கள் அதிகரித்துவருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டிருக்கின்றது. அது தொடர்பான முழுமையான விவரங்களை வழங்குமாறு பெய்ஜிங்கிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுவாசத் தொற்றில் இருந்து பாதுகாக்கும் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்குமாறும் சீன மக்களுக்கு சுகாதார நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது. சுகாதார நிறுவனத்தின் X (Twitter) சமூகவலைத் தளத்தில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுவாச நோய்கள் குறிப்பாக சிறுவர்களிடையே அதிகரித்துவருகின்ற சளிச் சுரம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Check the facts – வாட்ஸ்அப்பின் புதிய முயற்சி!

  • November 24, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் பொய் பரப்புரைக்கு எதிராக புதிய செயலியை உருவாக்கி உள்ளது. மேலும் ஒரு மாத காலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. உலகின் மிக முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனமாக வாட்ஸ்அப் உருவெடுத்து இருக்கிறது. பல்வேறு விதமான தகவல்கள், பல கோடி கணக்கான பயனாளர்கள், தகவல்களை பரிமாற பல்வேறு வழிகள் என்று வாட்ஸ்அப் நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. வாட்ஸ்அப்பின் மூலம் எண்ணற்ற தகவல்களை உடனுக்குடன் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

  • November 24, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான முறையிலும் யூதர்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது இவ்வாறான ஆர்ப்பட்டக்காரர்களுக்கு எதிராக பல கருத்துக்கள் ஜெர்மன் நாட்டில் முன்வைக்கபட்டுள்ளது. அதாவது யூதர்களுக்கு எதிரான எண்ணங்களை கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்றார்கள். இதனடிப்படையில் ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சி பிரதான் கூட்டு கட்சியான SPD கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகர் ஒரு கருத்தை வெளியிடுகையில், அதாவது ஜெர்மன் நாட்டில் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிரடி நடவடிக்கை – 80,000 தொலைபேசி எண்களுக்கு தடை!

  • November 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ScamShield செயலி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, சுமார் 80,000 தொலைபேசி எண்களை தடை செய்துள்ளது. அத்துடன் அந்த எண்களை, தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது. அத்துடன் சுமார் 5 மில்லியன் குறுஞ்செய்திகளை மோசடித் தகவல் என செயலி அடையாளம் கண்டுள்ளது. ScamShield செயலி சென்ற மாத நிலவரப்படி 750,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. செயலியில் மேம்பாடுகள் செய்யப்படுகின்றது. நச்சு நிரல்களை அடையாளம் காணும் மற்ற செயலிகளுக்கு ScamShield ஆதரவாகச் செயல்படுகிறது. நச்சு நிரல்களை அடையாளம் […]