இலங்கை

யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் மாவீரர் நாள் அஞ்சலி

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

முக்கிய செய்திகள்

உணர்வுடன் கலந்த மாவீரர் நினைவேந்தல்! புகைப்பட பதிவு

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் காரைநகர் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் வல்வெட்டித்துறை- கம்பர்மலை தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் முதல் மாவீரர் சங்கர் அவர்க்ளுக்கு அஞ்சலி  

இலங்கை செய்தி

தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 7 பேர் கொண்ட யாழ் குடும்பம்

  • November 27, 2023
  • 0 Comments

தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் பொலிசார் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை […]

விளையாட்டு

IPL Update – மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யா

  • November 27, 2023
  • 0 Comments

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. […]

இலங்கை

யாழ். தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை

பொலிஸாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் மாவீர்களுக்கு அஞ்சலி!

  • November 27, 2023
  • 0 Comments

பொலிஸாரின் பல தடைகளையும் மீறிய வகையில் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் மாவீரர் தின நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ உணர்வூபூர்வமாக நடைபெற்றது. மழைக்கு மத்தியிலும் மாவீரரின் தாய் ஒருவர் பிரதான ஈகச்சுடர் ஏற்ற ஏனையவர்கள் ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியில் கலந்துகொண்டு ஈகை சுடர் ஏற்றி […]

இலங்கை

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.      

இலங்கை

காரைநகரில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

  • November 27, 2023
  • 0 Comments

காரைநகரில் இன்றைய (27.11) தினம் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பெற்றோரினால் பொதுச்சுடரேற்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் அஞ்சலியுரையும் முன்னெடுக்கப்பட்டது . இதன்பொழுது மாவீரர் பெற்றோர்கள் ,பொதுமக்கள், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஆண்டி ஐயா விஜயராசா, நாகாராசா ,தவமணி , இலங்கை […]

பொழுதுபோக்கு

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ட்ரெய்லர் எப்படி இருக்கு? நீங்களும் பாருங்கள்…

  • November 27, 2023
  • 0 Comments

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘அன்னபூரணி’. இதில் நயன்தாரா, நாயகியாக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இலங்கை

சீனாவின் வசமாகும் ஹம்பாந்தோட்டை பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம்!

  • November 27, 2023
  • 0 Comments

புதிய ஹம்பாந்தோட்டை பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் SINOPEC க்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் சினோபெக் கம்பனியால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை நாளை (28.11) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் காஞ்சன […]