ஐரோப்பா

லண்டன் செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!

  • December 8, 2023
  • 0 Comments

JFK விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை காலை ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய குறித்த விமானத்தில், குடிபோதையில் இருந்தபோது அதிகாரி ஒருவர் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. லண்டனில் உள்ள மெட்ரோ பொலிஸால் கூறப்பட்டபடி, ஒரு பயணி இடையூறு விளைவித்ததாகவும், மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஊழியர்களிடமிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து 39 […]

ஐரோப்பா

ரஷ்யாவில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

  • December 8, 2023
  • 0 Comments

ரஷ்யாவில்  2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் மேலவையான கூட்டமைப்பு கவுன்சில் உறுப்பினர்கள், திகதியை நிர்ணயிக்கும் ஆணையை அங்கீகரிக்க ஏகமனதாக வாக்களித்தனர். “சாராம்சத்தில், இந்த முடிவு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது” என்று அறையின் பேச்சாளர் வாலண்டினா மத்வியென்கோ கூறினார். 71 வயதான புடின், மீண்டும் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் தேர்தல் நாள் திட்டமிடப்பட்டுள்ளதால் அவர் விரைவில் அவ்வாறு செய்வார் என்று பரவலாக […]

ஐரோப்பா

பாரிஸில் பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

  • December 8, 2023
  • 0 Comments

பாரிஸில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு அருகே இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த நெருக்கடியான பகுதியை தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளமை தற்செயலானது இல்லை என்பதை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை பாதுகாக்க மேலும் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேவேளை, 2024 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போதும் அதி உச்சப் பாதுகாப்பு கொண்டுவரப்படும் என பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோ […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

  • December 8, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (08.12)   பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் […]

இலங்கை

இலங்கையில் மண்மேடு சரிந்த விழுந்ததில் மலையக பாதை தடைப்பட்டுள்ளது!

  • December 8, 2023
  • 0 Comments

தியகல பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மக்கள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மண்மேடு சரிந்த இடத்தில் இருந்து மேலும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் பிரதான வீதியில் மண் அகற்றும் பணி சற்று தாமதமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையும் கூறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் லக்ஷபான நோர்டன் […]

ஆசியா

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியருக்கு நேர்ந்த கதி – உரிமையாளருக்கு சட்ட நடவடிக்கை

  • December 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர் சுகயீனமடைந்ததன் காரணமாக நிறுவனத்தின் இயக்குனர் ஒருவருக்கு 22 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலையிடத்தில் காணப்பட்ட பல பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஊழியருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனமான Ossis இன் ஒரே இயக்குநரான Denny Nasution Chng என்பவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலையிடத்தில் சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கு முழு பொறுப்பு Chng தான் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதனை அவர் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கட்டாயமாகும் சட்டம் – பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • December 8, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் புதிய சட்டம் ஒன்று காட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிறந்து குழந்தைகள் 3 வயதாக இருக்கும் பொழுது பாலர் பாடசாலையில் கல்வி கற்பதற்கு அரசாங்கமானது அவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பது சட்டத்தில் கூறப்பட்ட விடயமாக கருதப்படுகின்றது. இந்த விடயத்தை கருத்தில் கொண்டு ஜெர்மன் அரசாங்கமானது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது ஜெர்மன் நாட்டில் மொத்தமாக 430000 இவ்வகையான இடங்கள் உடனடியாக தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. அதாவது குழந்தைகளுக்கு சட்ட ரீதியான உரிமை இந்த […]

இலங்கை

இலங்கையின் ஒரு பகுதியில் சடுதியாக குறைந்த குழந்தைகளின் பிறப்பு விகிதம்

  • December 8, 2023
  • 0 Comments

கம்பஹா மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி நிலவுவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வருடம் வரையில் சுகாதாரத் துறையின் தரவுகளின் பிரகாரம் இந்த குறைவு காணப்படுவதாக தெரிவிககப்படுகின்றது. மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் இந்திக்க வன்னிநாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் குழந்தைகளின் பிறப்புகளைப் பார்த்து, 29,560 குழந்தைகள் 2017 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு 29,224 […]

இலங்கை செய்தி

சிங்களப் பெண்ணை திருமணம் செய்யப் போகும் சாணக்கியன்!! விளாசித் தள்ளிய அமைச்சர்

  • December 7, 2023
  • 0 Comments

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திற்கும் இடையில் பாராளுமன்றத்தில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சு தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது இந்த உரையாடல் இடம்பெற்றது. ‘சாணக்கியன் எம்.பி மகிந்த ராஜபக்சவிடம் உறுப்புரிமை பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துவிட்டு மட்டக்களப்பில் தேர்தலில் போட்டியிட்டார். அவர் தான் மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தார். 2010ல் எங்கள் கட்சியின் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதியுடன் சேர்ந்த கூட்டமைப்பின் எம்.பிகள்!!! அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • December 7, 2023
  • 0 Comments

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அந்த கூட்டணியில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே எதிர்க்கட்சியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் […]