இலங்கை

இலங்கையில் 64 சதவீதம் பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி

  • April 27, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 177588 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 274361 பரீட்சார்த்திகள் தேர்வுக்குத் தோற்றினர். அதன்படி, இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்களின் சதவீதம் 64.73 என்று பரீட்சைத் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில், 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தவும் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களில் 420 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்று தேர்வுத் […]

வாழ்வியல்

மாதவிலக்கின் போது பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

  • April 27, 2025
  • 0 Comments

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது பெண்களுக்கு உடல் வலி, வயிற்று வலி என பலவிதமான அசௌகரியங்கள் ஏற்படும். முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டு விலக்கின் போது சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் இருந்து முற்றிலும் விலகி தனியறையில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். நான்கு நாட்கள் மாதவிலக்கு முடிந்த பின்பு தான் தங்களுடைய வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிப்பார்கள். தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, அலுவலகம் என பலவிதமான பணிகளை மாதவிலக்கு நேரங்களிலும் செய்ய […]

செய்தி

ஜப்பானில் ATM பயன்படுத்தும் போது அமுலாகும் தடை

  • April 27, 2025
  • 0 Comments

ஜப்பானில் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை விதிக்கப்படவிருக்கிறது. ஒசாகா நகரில் மூத்தோர் தானியக்க வங்கி இயந்திரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அது பொருந்தும். அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களைக் கையாள அந்தப் புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது. சென்ற ஆண்டு மோசடிச் சம்பவங்களில் இழக்கப்பட்ட தொகை இதுவரை இல்லாத அளவாகச் சுமார் 500 மில்லியன் டொலரை எட்டியது. வயதானோர் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போல் ஆள்மாறாட்டம் செய்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ரே-பான் ஸ்மார்ட்கிளாஸில் மெட்டா ஏ.ஐ

  • April 27, 2025
  • 0 Comments

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, விரைவில் இந்தியாவில் தனது ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. உலகளாவிய கண்ணாடி பிராண்டான EssilorLuxottica உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகள், மெட்டா AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன. […]

வட அமெரிக்கா

நியூ ஜெர்ஸியில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ பரவல் – நெடுஞ்சாலைகள் மூடல்

  • April 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ பரவி வருகின்றது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்து 5,000க்கு மேற்பட்ட மக்கள் வெளியற்றப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் […]

வட அமெரிக்கா

டிரம்பின் வரி கொள்கைகளால் உலகளவில் காத்திருக்கும் நெருக்கடி – உலக வர்த்தக அமைப்பு தகவல்

  • April 27, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மாறிவரும் வரிக் கொள்கைகள் மற்றும் சீனாவுடனான மோதல் காரணமாக உலகளவில் பொருட்களின் வர்த்தக அளவு இந்த ஆண்டு 0.2 % குறைய வாய்ப்புள்ளதென உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. வரிகள் இல்லாவிட்டாலும் வட அமெரிக்காவில் வர்த்தகத்தில் சரிவு இருக்கும். இந்த ஆண்டு அங்கு ஏற்றுமதி 12.6 % இறக்குமதி 9.6 % குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் உலக வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் […]

விளையாட்டு

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவு வேண்டாம் – கங்குலி ஆவேசம்

  • April 27, 2025
  • 0 Comments

பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதனால், பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]

அறிந்திருக்க வேண்டியவை

வேற்று கிரகத்தில் உயிர்கள்: ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வலுவான ஆதாரங்கள்

  • April 27, 2025
  • 0 Comments

பூமியைத் தவிர்த்து வேறு எதுவும் கோள்களில் மனிதர்களோ அல்லது வேற்றுகிரக வாசிகளோ வாழ்கிறார்களா என்பது குறித்து ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் சமீபத்தில் K2 – 18 b என்ற கோளில் நுண்ணுயிரிகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட 8.6 மடங்கு பெரியது. ஜேம்ஸ் வெப் எனும் தொலை நோக்கியை வைத்துதான் விஞ்ஞானிகள் இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த K2-18b கிரகம் 5.2 மடங்கு பருமனாகவும், 9 மடங்கு அதிக நிறை […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி

  • April 27, 2025
  • 0 Comments

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். மத்திய மற்றும் ஊவா […]

உலகம் ஐரோப்பா

போப் பிரான்சிஸின் நல்லுடல் அடக்கம் – நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம்

  • April 27, 2025
  • 0 Comments

வழக்கமாகப் போப்பின் நல்லுடல் வத்திகனில் அடக்கம் செய்யப்படும் நிலையில் போப் பிரான்சிஸின் நல்லுடல் வத்திகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டது. செயின்ட் மேரி மேஜர் எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வத்திகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட முதல் போப், போப் பிரான்சிஸ். அதுவே போப் பிரான்சிஸின் இறுதி ஆசையாக இருந்தது. எளிமையான கல்லறையை அவர் விரும்பினார். அதில் எந்த அலங்காரங்களும் இருக்கக்கூடாது. அதில் “Franciscus” என்று எழுதப்பட்டிருந்தால் மட்டும் போதும் என்று அவர் தமது உயிலில் குறிப்பிட்டிருந்தார்.