இலங்கைக்கு அடுத்தகட்ட கடனை வழங்குவது தொடர்பில் IMF ஒன்றுகூடல்
இலங்கைக்கு அடுத்த கடன் தவணைக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக ஆராயும் பொருட்டு, எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூடவுள்ளது. வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அதன் பேச்சாளர் ஜுலி கொசாக் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு குழு, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பணிக்குழாம் மட்ட இணக்கப்பாட்டை எட்டியது. […]