ஆசியா

பாகிஸ்தானில் வேகமாக வறண்டு வரும் அணைகள் – நெருக்கடியில் பயிர் விதைப்பு பணிகள்

  • June 4, 2025
  • 0 Comments

பாகிஸ்​தானில் உள்ள அணை​கள் வேக​மாக வறண்டு வரு​கின்​றன. இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதன் காரண​மாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்​துள்​ளது. பாகிஸ்​தான் விவ​சா​யிகளின் பயிர் விதைப்பு பணி​களில் இது கடும் நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பாகிஸ்​தானின் இரண்டு முக்​கிய அணை​களாக ஜீலம் நதி​யின் குறுக்கே உள்ள மங்​களா மற்​றும் சிந்து நதி​யின் குறுக்கே உள்ள தர்​பேலா ஆகியவை உள்​ளன. இந்த அணை​களில் உள்ள நீரின் அளவு வேக​மாக குறைந்து அணைகள் வறண்டு வரு​கின்றன. இதற்​கு, […]

உலகம்

சூடானில் இருந்து வெளியேறிய 40 லட்சம் பேர் – அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

  • June 4, 2025
  • 0 Comments

சூடானில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் 2023-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் இருந்து இந்த மக்கள் வெளியேறியுள்ளனர். அண்டை நாடான சாட் (Chad) நாட்டுக்கு மட்டும் 8 லட்சம் பேர் குடிபெயர்ந்துள்ளனர். ஆனால், நிதிப்பற்றாக்குறை காரணமாக போதுமான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் கிடைக்காமல் அகதிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மனிதகுலத்தின் மிகப்பெரிய நெருக்கடியை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்தடைந்த புதிய ஏர்பஸ் விமானம்

  • June 4, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது. இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

விளையாட்டு

என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே – விராட் கோலியின் நெகிழ்ச்சி பதிவு

  • June 4, 2025
  • 0 Comments

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. இந்தநிலையில் பெங்களூரு அணியின் வெற்றி குறித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். […]

வாழ்வியல்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்!

  • June 4, 2025
  • 0 Comments

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் […]

ஆசியா

ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தியது சீனா!

  • June 4, 2025
  • 0 Comments

சீனாவில் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.து செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் 5ஜி அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஓட்டுநர் இல்லாத மின்சார சுரங்க லொரிகளை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. மங்கோலியாவில் உள்ள யிமின் திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தில் 100 மின்சார சுரங்க லொரிகள் இயக்கப்படுகின்றன. இந்த லொரிகளில் ஓட்டுநர் இல்லை, ஸ்டீரிங் இல்லை, கேபின்கூட கிடையாது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 90 டன் எடையை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில் படங்களை பதிவிட புதிய வசதி!

  • June 4, 2025
  • 0 Comments

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுபவர்களுக்கு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இனி 3க்கு 4 விகிதாச்சாரம் கொண்ட படங்களை இனி நேரடியாக பதிவிட முடியும். இதுவரை 1க்கு 1, 4க்கு 5 விகிதாச்சாரங்களில் உள்ள படங்களை மட்டுமே நேரடியாக இன்ஸ்டாவில் பதிவிடும் வசதி இருந்தது. 3க்கு 4 அளவு உள்ள படங்களை கிராப் செய்தே பதிவேற்ற வேண்டியிருந்தது. இந்நிலையில் அந்த படங்களையும் நேரடியாக பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மூல படத்தின் தெளிவில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே […]

இலங்கை

பிலியந்தலையில் பாரிய தீ விபத்து

  • June 4, 2025
  • 0 Comments

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு – பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸை நகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீயை அணைக்க கொழும்பு தீயணைப்புத் பிரிவுன் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.  

இலங்கை

இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

  • June 4, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை […]

விளையாட்டு

18 வருட கனவு.., முதல் முறையாக கோப்பை வென்றது RCB அணி.!

  • June 4, 2025
  • 0 Comments

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. ஆனால், இந்த போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தாலும், போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடத்தை முத்தமிட்டிருக்கிறது பெங்களூரு அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி […]