ஆசியா

தாய்லந்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பூனை கைது

  • May 24, 2025
  • 0 Comments

தாய்லந்தில் மீட்கப்பட்ட பூனை ஒன்று பொலிஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து தாக்கியதால் அதிகாரிகள் அதனைக் கைது செய்துள்ளனர். சம்பவத்தைக் காட்டும் படங்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். தொலைந்துபோன அந்த அமெரிக்க ‘shorthair’ ரகப் பூனையை ஒருவர் கண்டுபிடித்து அதனைக் பொலிஸார் ஒப்படைத்தார். அந்தப் பூனையோ பொலிஸ் அதிகாரிகளைக் கடித்ததோடு விடாமல் நகத்தால் கீறியுள்ளது. இந்தப் பூனை பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவை நீங்கள் பகிர்ந்தால் அதன் உரிமையாளர் இங்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய வீடுகளில் குறைப்பாடுகள் – அம்பலப்படுத்திய அமெரிக்கர்

  • May 24, 2025
  • 0 Comments

மெல்போர்னில் வசிக்கும் ஒரு அமெரிக்க வெளிநாட்டவர் ஆஸ்திரேலிய வீட்டுவசதியில் ஒரு பெரிய குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளார். உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த குறைந்தபட்ச உட்புற வெப்பநிலை தரநிலைகளை ஆஸ்திரேலிய வீடுகள் பூர்த்தி செய்யத் தவறி வருவதாக ஜான் பாபோன் சுட்டிக்காட்டுகிறார். வீடுகளில் சரியான வெப்ப காப்பு மற்றும் திறமையான வெப்ப அமைப்புகள் இல்லாததால் குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும் என்று அந்த வெளிநாட்டவர் கூறுகிறார். ஒரு வீட்டில் குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் என்று உலக […]

வாழ்வியல்

ஒருவருக்கு பிடித்த நிறத்தை வைத்து அவரின் குணத்தை கணிக்கலாம்

  • May 24, 2025
  • 0 Comments

வண்ணங்களுக்கும் நமது மூளைக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் பல நிறுவனங்கள் ஒரு சில குறிப்பிட்ட நிறத்தை தங்களது லோகோவாக அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் அனைவருக்குமே மிகவும் பிடித்த கலர் என ஒன்று இருக்கும். உதாரணமாக, கருப்பு, பச்சை, ரோஸ் ஆகிய நிறங்களை கூறலாம். பொதுவாக சேல்ஸ் என்ற வார்த்தைக்குப் பின்னால் சிவப்பு நிற பேக்ரவுண்டை பயன்படுத்தி இருப்பார்கள். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்து 80% விற்பனையை அதிகரிக்க முடியும் என உளவியல் ரீதியாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக், […]

இலங்கை

வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 20 இலங்கையர்களை கைது செய்ய நடவடிக்கை

  • May 24, 2025
  • 0 Comments

வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்த 20 இலங்கையர்கள் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் ஏற்கனவே சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார். குறித்த 20 பேரும் தலைமறைவாகியுள்ள நாடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்

  • May 24, 2025
  • 0 Comments

கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ மட்டுமல்லாமல் அதற்கேற்ற ஆடியோ, கதாபாத்திரங்களின் உரையாடல், இசை, சுற்றுப்புற சத்தங்கள், SFX உள்ளிட்டவற்றை தெளிவாக தயாரித்துக் கொடுக்கிறது. கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ‘Veo 3’ Al தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Veo 3 அறிமுகப்படுத்தப்பட்டவுடன், சமூக ஊடக பயனர்கள் அதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட […]

ஆசியா

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாக கூறும் பாகிஸ்தான்

  • May 24, 2025
  • 0 Comments

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்த்தை கடைப்பிடிக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் கூறியுள்ளபடி உண்மையாக நடந்துகொள்வோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்கிறோம். இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் உள்ளது. எனவே, போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதற்கு காலாவதி தேதி […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை

  • May 24, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 10 கிலோமீற்றர் வேகத்தில் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனியை உலுக்கிய கத்திக்குத்து – 17 பேரை கத்தியால் குத்திய பெண்

  • May 24, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறைந்தது 17 பேரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். 39 வயது சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு ஜெர்மனியின் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) ஹம்பர்க் மேயருடன் பேசியபோது தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். “பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன என அவர் […]

விளையாட்டு

ரோஹித், விராட் ஓய்வு குறித்து கௌதம் கம்பீர் வெளியிட்ட தகவல்

  • May 24, 2025
  • 0 Comments

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இவர்களின் ஓய்வு இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் படுகாயம்

  • May 24, 2025
  • 0 Comments

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா-கண்டி வீதியில் டோப்பாஸ் பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற நேரத்தில் பேருந்தில் ஓட்டுநர் உட்பட 54 பேர் பயணம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 3 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் பயணித்த குழுவின் குருநாகலிலிருந்து […]

Skip to content