வட அமெரிக்கா

வியட்நாமில் கோல்ப் கிளப் கட்டும் ட்ரம்ப் – வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்

  • August 13, 2025
  • 0 Comments

வியட்நாமில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பத்தின் மூலம் கோல்ப் கிளப் மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு சிறிய தொகைப் பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த கோல்ப் மைதானத் திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், ட்ரம்ப் நிறுவனத்திற்கு 5 […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய காட்டுத்தீ – இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல நாடுகள் பாதிப்பு

  • August 13, 2025
  • 0 Comments

தெற்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பால்கன் நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளில் வெப்பநிலை ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில பகுதிகளில் வெப்பநிலை 44 பாகை செல்சியஸைத் தாண்டக்கூடும் என்று ஸ்பெயினில் வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 4,000 பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் மட்டும் ஏற்பட்ட காட்டுத்தீயின் எண்ணிக்கை 30க்கும் […]

இலங்கை

இலங்கை பஸ்களில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

  • August 13, 2025
  • 0 Comments

இலங்கையில் தொலைதூர பஸ்களில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் துறையின் பங்களிப்புடன் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் தனியார் பஸ்களில் 40 ஏஐ கமரா (AI camera) அமைப்புகள் பொறுத்தப்படவுள்ளன. இந்த கமரா சாரதியின் நடத்தையைக் கண்காணித்து, சாரதியை எச்சரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். புதிய கமரா அமைப்பு சாரதி சோர்வடைவதையும், நித்திரை கொள்வதையும் கண்டறியும் திறன் […]

வாழ்வியல்

மண்பானை தண்ணீரின் மகத்துவம்!

  • August 13, 2025
  • 0 Comments

வெயில் காலம் வந்துவிட்டாலே மண்பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது. காலம் காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், தங்களுடைய மற்ற தேவைகளுக்கும் மண்பானையை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். முக்கியமாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலிருந்தே மண்பானையின் முக்கியத்துவத்தைப் புரிந்து […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

போர் நிறுத்த முயற்சியில் டிரம்ப் – ரஷ்யாவின் யோசனையை நிராகரித்த ஜெலென்ஸ்கி

  • August 13, 2025
  • 0 Comments

டான்பாஸ் பகுதியை போர் நிறுத்தத்திற்காக விட்டுக்கொடுக்கும் ரஷ்யாவின் யோசனையை உக்ரைன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அமைதி ஒப்பந்தத்தில் ஒரு பிராந்திய உடன்பாட்டை எட்ட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கீவ் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸின் சில பகுதிகள் சரணடைய வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி கோரியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகின் முதல் ஏ.ஐ இயர்பட்ஸ்.. 40 மணி நேர பேட்டரியுடன் அறிமுகம்

  • August 13, 2025
  • 0 Comments

Mivi நிறுவனம் தனது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) Mivi AI Buds-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்ஸ், அதிவேக ஒலி தொழில் நுட்பத்தையும், ஏ.ஐ. திறன்களையும் ஒருங்கிணைத்து, உணர்வுபூர்வமான மற்றும் புத்திசாலித்தனமான இன்-இயர் துணையை உருவாக்கும் என Mivi நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது Mivi AI Buds, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பினிஷிங் உடன் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. அதன் ஒரே உலோகத்தால் ஆன உடம்பு, மணற்கடிகாரத்தால் […]

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு – பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

  • August 13, 2025
  • 0 Comments

சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு முனையத்தின் உணவு மையத்தில் பொலிஸார் கைது செய்து கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அதிகாரியின் துப்பாக்கி வேண்டுமென்றே சுடப்பட்டதா அல்லது தற்செயலாக சுடப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவத்தைத் […]

விளையாட்டு

ஒன்லைன் சூதாட்ட செயலி விவகாரம் – சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணைக்கு தயாராகும் அதிகாரிகள்

  • August 13, 2025
  • 0 Comments

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட செயலியான 1xBet உடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 1xBet செயலி, இந்தியாவில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சூதாட்டச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம், கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.சுரேஷ் ரெய்னா, இந்த சட்டவிரோத ஆன்லைன் […]

இலங்கை

இலங்கையில் 62,000 பேரை அரச சேவையில் சேர்ப்பதற்கு தயாராகும் ஜனாதிபதி அநுர

  • August 13, 2025
  • 0 Comments

கிட்டத்தட்ட 62,000 பேரை அரச சேவையில் சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 25வது தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். “நாங்கள் மொத்தமாக ஆட்சேர்ப்பு செய்யவில்லை. நாங்கள் ஒரு லட்சம், ஒன்றரை லம்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்யவில்லை. எனினும் அரச சேவையை பராமரிக்க தேவையான 62,000 பேரை நாடு முழுவதும் அடையாளம் கண்டுள்ளோம். இந்த 62,000 பேரை விரைவில் அரசாங்க சேவையில் சேர்க்குமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

  • August 13, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை […]

Skip to content