இந்தியா – விஜிலென்ஸ் துறை சோதனையின் போது பிடிபடாதிருக்க ஜன்னல் வழியாகப் பணத்தை வீசிய அரசு அதிகாரி
ஊழல் கண்காணிப்புத் துறையினர் தம் வீட்டைச் சோதனையிட்டபோது, நபர் ஒருவர் ஜன்னல் வழியாக ஐந்நூறு ரூபாய் பணக்கட்டுகளை வீசியெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நிகழ்ந்தது. பைகுந்த நாத் சாரங்கி என்ற அந்த நபர் மாநில ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளராக இருக்கிறார்.அவர் ஊழல் செய்வதாகவும் தமது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பதாகவும் நீண்டகாலமாகப் புகார் வந்தது. இதனையடுத்து, ஒடிசா ஊழல் ஒழிப்புத் துறையினர் அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர் […]