Site icon Tamil News

பெண்களை தவிர்க்கவும் – அழகான ஆண்களுக்கு சீன அரசாங்கம் விசேட எச்சரிக்கை

சீனாவில் அழகான ஆண்கள், பெண்களிடமிருந்து தள்ளி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தரப்புகளுக்கு வேவு பார்ப்பதற்கு எதிராக மாணவர்களை எச்சரிப்பதற்கு சீன அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம். இரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கு அவர்கள் வசீகரமாக நடந்துகொள்ளலாம் என்று தேசியப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வேலை விளம்பரங்கள், இணை தேடும் இணையத்தளங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு உளவாளிகள் இருப்பதாக அது கூறியது. எந்த நாட்டின் உளவாளிகள் அத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர் என்பதை அமைச்சு குறிப்பிடவில்லை.

ஒருவரை ஒருவர் வேவு பார்க்க ஆள் அனுப்புவதாக மேற்கத்திய நாடுகளும் சீனாவும் அடிக்கடி ஒன்றை மற்றொன்று குற்றஞ்சாட்டுவதுண்டு.

சீனாவின் மத்திய அரசாங்கத்துக்குப் பணியாற்றிய ஒரு தம்பதியை பிரிட்டனுக்கு வேவு பார்க்கும்படி அழைத்ததாகச் சீனா இவ்வாண்டு ஜூன் மாதம் குற்றஞ்சாட்டியது.

Exit mobile version