புருண்டியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் : 20 பேர் உயிரிழப்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/12/bru-jpg.webp)
காங்கோ ஜனநாயகக் குடியரசின் புருண்டியின் மேற்கு எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
புருண்டியின் புஜம்புரா மாகாணத்தில் உள்ள கடும்பா கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பாலும் ” பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது வீடுகள் தாக்குதலாளிகளால் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புருண்டியின் ஜனாதிபதி Evariste Ndayishimiye இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.